படப்பிடிப்பில் மீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த் !

0

அண்ணாத்த  ரஜினியின் 168 ஆவது திரைப்படம். இத்திரைப்படத்தை சிவா எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. 

படப்பிடிப்பில் மீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த் !
அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் தான், தான் நடிக்க வேண்டிய மீதி காட்சிகள் அனைத்தையும் நடித்து கொடுத்து விட்டு ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். 

எஜமான், வீரா, முத்து படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இதில் மீனா, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

பால்கனியில் இருந்து தூக்கி வீசு - காதலி உத்தரவால் மனைவியைக் கொன்ற கணவன் !
அண்ணாத்த படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அதிரடியான கேள்வி கேட்டு திகைக்க வைத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மீனா. 

இது பற்றி அவர் கூறும் போது, "ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென என்னருகில் வந்த ரஜினி சார், மீனா நீ எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டாய் என கூறினார்.

பலரும் அருகில் இருந்த நிலையில் ரஜினி சார் அப்படி கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.உடனே அவர் சிரித்துக் கொண்டே, "நாங்கள் எல்லோருமே இத்தனை வருடங்களில் மாறி விட்டோம்.. 

ஆடைகளை களைந்து நடனம் ஆடிய திருநங்கைகள் - அதிர்ச்சியில் பொதுமக்கள் !

ஆனால் நீ மட்டும் வீரா படத்தில் நடித்த போது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாயே" என கூறி கலாட்டா பண்ணி, என்னை மட்டுமல்லாமல், அருகில் இருந்தவர்களையும் சிரிக்க வைத்தார்" என கூறியுள்ளார் மீனா.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)