பாலியல் குற்றச்சாட்டுக்கு லைக் போட்ட தனுஷ் பட நடிகை.. மன்னிப்பு கேட்டார் !

0

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பதிவை லைக் செய்த பிரபல நடிகை மன்னிப்பு கேட்டுள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பார்வதி மேனன். 

பாலியல் குற்றச்சாட்டுக்கு லைக் போட்ட தனுஷ் பட நடிகை
அவுட் ஆஃப் சிலபஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து நோட்புக், வினோதயாத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

மலையாளத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவிலும் தடம் பதித்தார் பார்வதி. தமிழில் பூ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். 

கொரோனா பாதுகாப்பு உடை  PPE சூட் என்றால் என்ன?

தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட நடிகை  !

சினிமாவில் வாய்ப்பு பெற படுக்கையை பகிர வேண்டியுள்ளதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் பட வாய்ப்புகளை இழந்தார் பார்வதி. தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் நடிகை பார்வதி. 

இந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்று நோய், ரத்த அழுத்தம் குறைபாடு வராது !

கேரள பாப் பாடகரான வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். தொடக்கத்தில் இதனை மறுத்த வேடன் பின்னர் தவறை ஒப்புக் கொண்டார். 

பாலியல் குற்றச்சாட்டுக்கு லைக் போட்ட நடிகை

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனாலும் அவர் தவறை வெளிப்படையாக ஏற்கவில்லை என்று கண்டங்கள் எழுந்தன.

இந்த நிலையில் வேடன் பதிவை பூ பட நடிகை பார்வதி முதலில் ‘லைக்' செய்திருந்தார். பின்னர், அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதும் டிஸ்லைக் செய்து விட்டார்.

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ! 

இது குறித்து பேசிய நடிகை பார்வதி, “வேடன் மீது குற்றம் சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வேடனின் மன்னிப்பு பதிவு பாராட்டும்படியானது இல்லை என்பதை அறிவேன். 

நடிகை பார்வதி

வேடன் கேட்ட மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்ததும் எனது 'லைக்'கை நீக்கி தவறை திருத்தி விட்டேன். 
கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்?

நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன். எனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

நடிகை பார்வதியின் இந்த பதிவை பலர் லைக் செய்திருந்த போதும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)