பேய் ஓட்டுகிறேன் என்று 7 வயது சிறுவன் அடித்து கொலை !

0

திருவண்ணாமலை அருகே பேய் ஓட்டுவதாக கூறி மூன்று பெண்கள் 7 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேய் ஓட்டுகிறேன் என்று 7 வயது சிறுவன் அடித்து கொலை !
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவன் சபரி, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். 

சிறுவனுக்கு பேய் பிடித்ததாக நினைத்த அவரது உறவினர்கள் பேயை விரட்டுவதாக கூறி, மூன்று பெண்கள் அந்த சிறுவனை சரமாறியாக அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர். 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கதறி அழுதபோதும், தொடர்ச்சியாக அந்த பெண்கள் அடித்ததால் மயங்கி விழுந்துள்ளார். 

பின்னர் உறவினர்கள் சிறுவனை எழுப்ப முயன்ற போது, அச்சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் சிறுவனை அடித்து கொலை செய்த கேவி குப்பத்தை சேர்ந்த திலகவதி, பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோர் மீது அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளார். 

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் 3 பெண்களும் அடித்தே கொலை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் திலகவதி உள்பட 3 பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். 

உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதயத்தை ஆரோக்கியமா வச்சுக்கணுமா?

போலீசார் நடத்திய விசாரணையில், "வலிப்பு வந்து சிறுவன் இறந்து விட்டதாக கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் வாக்குமூலம் அளித்திருப்பது" அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)