நம் உடலில் நீர்சத்து குறைபாடு என்றால் என்ன?

0

உடலில் போதியளவு நீரின் அளவு இல்லாததை தான் நீர் வறட்சி அல்லது நீர் சத்து குறைபாடு என கூறுகிறோம். உடலில் நீர் சத்து / அளவு குறைந்தால் இரத்தத்தின் அடர்த்தி குறையும். 

நம் உடலில் நீர்சத்து குறைபாடு என்றால் என்ன?
இதனால், இரத்த ஓட்டம் தடைப்படும், உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையும், செரிமான சிக்கல்கள் ஏற்படும். 

அதாவது உடலில் நீர் குறைந்துள்ளது என்பது உடலில் தேவையான நீரும் உப்புக்களும் குறைந்துள்ளது என்று பொருள். 

இந்த தாது உப்புகள் உடலின் மிகப்பெரிய வேலையான செல்களின் செயல்பாட்டிற்குத் தேவைப்படுகின்றது. 

ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள் !

குறிப்பாக தசைகளின் செல்களின் செயல்பாட்டிற்கும், ரத்த செல்களின் செயல்பாட்டிற்கும் நீரும், தாது உப்புகளும் மிக முக்கியமாகின்றது. 

நீர் சத்து குறைவு மிக ஆபத்தான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது குறித்து விரிவாக சொல்லும்படி கேட்ட போது, “நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நீரைச் சார்ந்தே உள்ளன. 

உடலில் நீரின் அளவு மாறுபடும் போது

நம் உடலில் 60 சதவிகிதம் நீர் தான் உள்ளது. உடலில் நீரின் அளவு மாறுபடும் போது, அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் 85 சதவிகிதம் நீர் தான் உள்ளது. 

அதனால் தான் உணவைக் காட்டிலும் நீர் மிகவும் அவசியமானது என்கிறோம். சுவாசம், வியர்வை, சிறுநீர், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் நீர் இழப்பு ஏற்படுகிறது. 

பிராய்லர் சிக்கன்களால் மார்பக புற்று நோய் வருகிறது !

இதைச் சரிக்கட்ட, இந்தச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். 

நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு செரிமானம் ஆக, செரிமானத்தில் இருந்து ஊட்டச் சத்துக்கள் கிரகிக்க, உடலின் வெப்பநிலையைத் தக்க வைக்க, 

சீரான ரத்த ஓட்டம் இருக்க, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவு சென்று சேர, திசுக்களில் உருவாக்கப்படும் நச்சுக்களை வெளியேற்ற என நீரின் பயன்பாடு நீண்டு கொண்டே செல்லும். 

டிஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு

உடலில் போதுமான நீர்ச் சத்து இல்லை என்றால், ஏற்படக்கூடிய மிக மோசமான பிரச்னை, டிஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு. 

நீரிழப்பால், மூட்டு, வயிறு, முதுகுப் பகுதியில் வலி என உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கி, மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில உணவுப் பொருள் !

சரியான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவில்லை எனில், அது நம்முடைய உடலின் முழு இயக்கத்தையும் பாதிக்கும்.

ஒவ்வொருவரின் உடல் உழைப்பைப் பொருத்து, நீரின் தேவை அமையும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், 

அன்றைய தினத்தை நல்லபடியாகக் கடப்பதற்கும் ஒரு நாளைக்கு, இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. 

நீர்சத்து குறைபாடு

நாம் வசிக்கும் பகுதி வெப்ப மண்டலம் என்பதால், இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் (எட்டு கிளாஸ்) தண்ணீர் என்பது கட்டாயம். 

போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்கிறோமா என்பதை, சிறுநீரின் நிறத்தைக் கொண்டே முடிவு செய்து விடலாம். 

உடலில் இரத்தத் தட்டுக்களை அதிகரிக்கும் உணவுகள் !

சற்று மங்கலான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். 

மஞ்சள் நிறத்தில், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், நாற்றத்துடன் இருந்தால், இன்னும் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றனர்

அது சரி நீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?

அது சரி நீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?

காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும்.

உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.

தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தால் ஏற்படும் விளைவுகள் !

சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின் போது தண்ணீர் குடிக்க வேண்டும்.

தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும்.

நீர்ச் சத்து நிறைந்த காய்கனிகள்

நீர்ச் சத்து நிறைந்த காய்கனிகள்

வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், 

முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து உள்ளது.

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ! 

தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில் 84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது.

பச்சைக் காய்கறி, பழங்களை ஒரு நாளைக்கு ஐந்து கப் வீதம் எடுத்துக் கொள்ளலாம். இது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். உடலில் நீர்ச் சத்தை நிலைத்திருக்கச் செய்யும்.

அறிகுறிகள் (Symptoms)

சாதாரண டீஹைடிரேஷனுக்கான அறிகுறிகள்:

சாதாரண டீஹைடிரேஷனுக்கான அறிகுறிகள்

அதிக தாகம் மற்றும் தொண்டை வறண்டு போவது

தலை வலி

சிறுநீர் மஞ்சளாக போவது

சிறுநீர் கழிப்பதில் குறைபாடு

சரும வறட்சி

சருமத்தில் வறட்சி காரணமாக வெடிப்புகள்

டூத் பேஸ்ட்டுக்கு குறியீடு இருக்கா !

அதிகமானால் அறிகுறிகள் (Heavy Symptoms)

சிறுநீர் மஞ்சளாக போவது /சிறுநீர் கழிப்பதில் குறைபாடு

வேகமாக மூச்சு வாங்குவது

வேகமான இதயத்துடிப்பு

சன்மான கண்கள்

சத்து குறைபாடு, தூக்கமின்மை, எரிச்சல்

மயக்கம்

குழந்தைகளின் டீஹைடிரேஷனுக்கான அறிகுறிகள் பெரியவர்களை விட  சிறிது வேறுபாடு கொண்டது :

வாயி மற்றும் நாக்கு வறட்சி

அழுகும் போது கண்ணில் தண்ணீர் வராதது

சன்மான கண்கள் மற்றும் கன்னங்கள்

சத்து குறைபாடு மற்றும் ஓய்வின்மை

உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

மேலும் இது குறிப்பிடத்தக்கதாகும் அதிக டீஹைடிரேஷன் ஏற்பட்டால் மருத்துவரின் உடனடி ஆலோசனை பெறுவது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)