ஆக்கிபோட்ட பெண்ணுக்கு நன்றிக்கடன்... அதிர்ச்சியில் கிராம மக்கள் !

0

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சமையல் செய்து கொடுத்த பெண்ணை வாலிபர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். 

ஆக்கிபோட்ட பெண்ணுக்கு நன்றிக்கடன்... அதிர்ச்சியில் கிராம மக்கள் !
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் காந்தி நகர், கலைஞர் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மோகனா (35). அதே பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (38). 

அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். தனியாக வசிக்கும் ஏசுதாஸ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், சமையலுக்கு ஆள் தேவை என்று கேட்டிருந்தார். 

ஆனாலும் அவருக்காக சமையல் செய்து தர யாரும் முன் வரவில்லை. இந்நிலையில் நாராயணன் மனைவி மோகனா ஏசுதாசுக்கு சமையல் செய்து தர முன்வந்துள்ளார்.

அந்தவகையில் கடந்த சில மாதங்களாக மோகனா தினமும் ஏசுதாஸ் வீட்டுக்கு வந்து சமையல் செய்து தந்துவிட்டு செல்வது வழக்கம். 

நேற்று மாலை மோகனா சமையல் செய்வதற்காக ஏசுதாஸ் வீட்டிற்கு வந்தார். பின்னர் சிறிது நேரத்தில் ஏசுதாஸ் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு அவசரம் அவசரமாக சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு ஓடிச் சென்று, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். 

அப்போது மோகனா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சோழவரம் போலீசார் ஏசுதாஸ் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு மோகனா இறந்து கிடந்தார். 

இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசுதாஸை தேடி வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings