டியூஷன் சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சி சம்பவம் !

0

15 வயதான சிறுமி ஒருவர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் டியூஷனுக்கு படிக்க சென்றுள்ளார். 

டியூஷன் சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம் அதிர்ச்சி சம்பவம் !
இதனை யடுத்து, டியூஷனில் இருந்து சிறுமி மாலையில் தனியாக வீடு திரும்பும் போது, அந்த பகுதியைச் சேர்ந்த சில மர்ம நபர்கள், சிறுமியை வாயை பொத்தி அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர். 

இதை தொடர்ந்து, யாரும் இல்லாத பகுதிக்குச் சிறுமியைக் கடத்திச் சென்ற அந்த மர்ம நபர்கள், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் துடிகத் துடிக்க அந்த சிறுமியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின், சிறுமியை அதே இடத்தில் போட்டு விட்டு, அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அந்த சிறுமி மிகுந்த வேதனையோடு தடுமாறியபடி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். 

பின், தனக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால், அந்த சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி திடீரென உயிரிழந்தார். 

இதனால், மன வேதனை அடைந்த சிறுமியின் தந்தை ரோஷன் கூறும் போது "அந்த மர்ம கும்பல் தான், என் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, விஷம் கொடுத்து கொலை செய்துள்ளது. 

மேலும், என் மகள் இறப்பதற்கு முன்பு நடந்த எல்லாவற்றையும் எங்களிடம் கூறி விட்டாள், உடனே எங்கள் மகளை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் 

ஆனால் அங்கு அவள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்" என்றார். இதை தொடர்ந்து, சிறுமி உயிரிழப்பதிற்கு முன்பு அவர் கைப்பட எழுதிய கடிதம் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், தற்போது இரண்டு பேரை கைது செய்து உள்ளனர். 

மேலும், சிறுமி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளதை அடுத்து இதை பற்றி பேசிய போலீசார் 

"சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் அதற்க்கு பிறகே முழுமையான தகவல்கள் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)