தானே கடவுள் என்று சொல்லும் நித்தி... அவரின் பெருமாள் அவதாரம் !

0

ஆஸ்திரேலியா வந்து சேருபவர்களை தமது கைலாசா நாட்டுக்கு கருடா எனப்படும் தமது நாட்டு சிறிய ரக விமானத்தில் இலவசமாக அழைத்துச் செல்வோம் என்றும், 

நித்தியின் பெருமாள் அவதாரம் !
கைலாசா நாட்டுக்கான விசா 3 நாட்கள் மட்டும் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் என்று சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தடாலடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கைலாசா என்பது, "இந்துமதத்தை பின்பற்ற முடியாத நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்துக்களின் எல்லையற்ற நாடாகும். 

இது அமெரிக்காவில் உள்ள இந்து ஆதி சைவ மக்களால் உருவாக்கப் பட்டது என்றாலும் இனம், பாலினம், சாதி, மதம் என எந்த வேறுபாட்டையும் பார்க்காத இந்துக்களுக்கான நாடாகும். 

இந்நாட்டில் ஆன்மீகம், கலாச்சாரம் அகிம்சை ஆகியவை பின்பற்றப்படும்" என்று ஒரு விளக்கமும் தரப்பட்டது.ஆண்டி என்றாலும் ஓகே தான். 

அதிபர் என்றாலும் ஓகே தான்" என்கிறார் நித்யானந்தா.. இதுக்கு சிரிப்பதா, கொந்தளிப்பதா என தெரியவில்லை. கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருக்கிறது. 

உள் நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்கப்பட்டு தயாராகி விட்டது. 

நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக் காக செலவிட வங்கி தொடங்கி உள்ளேன்.

வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப் பட்டுள்ளது. 

ஒரு நாட்டை தனி மனிதனால் எப்படி உருவாக்க முடியும்? இது சாத்தியமா? பொருளாதார கொள்கையை யார் வெளியிட முடியும்? 

தானே கடவுள் என்று சொல்லும் நித்தி

அப்படி யென்றால் இவரை கைது செய்யவே முடியாதா என்ற பல கேள்விகளும் சந்தேகங்களும் நமக்கு எழுந்த படியே இருக்கின்றன..

இந்நிலையில் தன்னை கடவுளில் அவதாரம் என்று இத்தனை நாளும் சொல்லி வந்த நித்தியானந்தா, தற்போது, தானே கடவுள் என்று சொல்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது அவரின் பெருமாள் அவதாரம்.

இந்தியாவில் வழக்குகள் அவரை துரத்தியதால் எஸ்கேப் ஆகி, ஒரு தீவினை விலைக்கு வாங்கி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார்.

கைலாசாவிற்கு வர இலவச விசா, இலவசம் விமான டிக்கெட் என்று அறிவிப்புகளை வெளியிட்ட நித்தியானந்தா, மன்னர்கள் காலத்தில் இருந்த பொற்காசுகளை தனது நாட்டில் புழக்கத்தில் விட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கைலாசாவின் இறையாண்மை, கல்விக் கொள்கை என்று அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நித்தியானந்தா, 

சிவன், கால பைரவர் போன்று வேடமணிந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

தானே கடவுள் என்று சொல்லும் நித்தி... அவரின் பெருமாள் அவதாரம் !

புதிய சர்ச்சையாக அவர் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சி அளித்து, ''பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமன ஆசீர்வாதங் களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளில் இருந்து வெளிவாருங்கள். 

செல்வம் ஏராளமாக பெருகும்'' என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

வெங்கடாஜபலதி போன்று கடந்த 8ம் தேதி அவர் வெளியிட்டுள்ள வீடியோவும், புகைப்படங்களும் வைரலாகி பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 

பக்தர்கள் பலரும் இந்த புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)