இன்சூரன்ஸ் தான் முக்கியம் கணவன் தேவையில்லை... தீயில் கருகிய கணவர் !

0

திருப்பூர் அடுத்த துடுப்பதி பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (52). இவர் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கியதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்சூரன்ஸ் தான் முக்கியம் கணவன் தேவையில்லை... தீயில் கருகிய கணவர்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் மனைவி ஜோதிமணியுடன் ஆம்னி வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வேனை உறவினர் ராஜா என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது வேன் தீ பிடித்து எரிந்துள்ளது. 

இதில் ரங்கராஜன் வேனோடு கருகி உயிரிழந்தார். ராஜா மற்றும் ஜோதிமணி காயங்கள் இன்றி உயிர்தப்பினர். 

தகவல் அறிந்து வந்து ஆய்வு செய்த போலீசார் வேனில் இருந்த மூவரில் ஒருவர் உயிரிழக்க 2 பேர் காயங்கள் இன்றி தப்பியதால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். 

இது குறித்து ராஜா, ஜோதிமணியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை வேனோடு எரித்து கொன்றதாக மனைவி ஜோதிமணி ஒப்புக் கொண்டுள்ளார். 

இதனால் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜா, ஜோதிமணி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் கடந்த மாதம் நடந்த சாலை விபத்திலும் இவர்களுக்கு தொடர்ப்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பணத்திற்காக மனைவி கணவனை உயிரோடு எரித்து கொன்று நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)