ஹோட்டல் ரூமில் சீலிங் பேனை பிடித்து தொங்கிய விஜே சித்ராவின் தாய் !

0

சித்ரா தூக்கு போட்டு தொங்கிய சீலிங் பேனை பிடித்தபடி, திடீரென சித்ராவின் அம்மாவும் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கடுமையான வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.

ஹோட்டல் ரூமில் சீலிங் பேனை பிடித்து தொங்கிய விஜே சித்ராவின் தாய்
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கிய நடிகை சித்ரா, பின்னர் சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். 

இதனிடையே இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. 

நேற்று இரவு சீரியல் ஷூட்டிங் முடிந்த பிறகு தன் வருங்கால கணவருடன் பூந்தமல்லி நசரத்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளார். 

இதனிடையே காலை குளிக்க செல்வதாகவும், ஹேம்நாத்தை வெளியே இருக்குமாறும் கூறியதாக தெரிகிறது. 

ஆனால் அதன் பிறகும் ஓட்டலின் அறை திறக்கப்படாததால் மாற்று சாவி போட்டு உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சித்ரா சடலமாக கிடந்தார். 

உண்மையிலேயே சித்ரா எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்?

இதுவரை எந்த நடிகையின் தற்கொலையும் இப்படி ஒரு மர்மத்தை தாங்கி கொண்டிருந்ததில்லை.. உண்மையிலேயே சித்ரா எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? 

சித்ரா இறந்த அன்று ஹோட்டல் ரூமில் என்ன தான் நடந்தது? என்பது பற்றி இதுவரை முழுமையாக தெரிய வரவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே சித்ராவின் மரணம் தொடர்பாக பலவித குழப்பங்கள் எழுந்தபடியே உள்ளன. 

பல கோணங்களில் விசாரணை நடந்து, பின் சித்ரா தற்கொலைக்கு ஹேமந்த் காரணம் என்று கைது செய்யப்பட்டார்.

பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் சித்ராவின் கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட காயங்கள் மட்டுமே இருப்பதாகவும்,  அவரை அடித்து தாக்கியதற்கான காயங்கள் எதுவும் இல்லை என்றும் சொல்லப்பட்டது. 

சித்ராவின் குடும்பம் ஹோட்டலுக்கு வந்தது

இதை தவிர, சித்ராவின் தாடையில் இருந்த கீறலும் அவரது நகத்தினால் ஏற்பட்டது என்றும் தெளிவாக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் சித்ரா குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. சித்ரா தங்கியிருந்த அந்த ஹோட்டல் ரூமிற்கு சித்ராவின் டிரஸ்களை எடுத்து செல்ல அவரது அம்மா வந்துள்ளார். 

இதற்கு ஹேமந்த் குடும்பத்துக்கு போலீசார் அனுமதி தந்துள்ளனர். அதனால், சித்ராவின் குடும்பம் மட்டும் முதலில் ஹோட்டலுக்கு வந்தது. 

போலீசார் துணையுடன் சித்ராவின் அம்மா, அப்பா, உறவுக்கார பெண்ணும் வந்திருந்தனர். சித்ரா தங்கியிருந்தது, 113-வது ரூம் ஆகும். அந்த ரூமை திறந்ததுமே கதறி கதறி அழ ஆரம்பித்து விட்டார்  சித்ராவின் அம்மா. 

பிறகு சித்ரா தற்கொலை செய்து கொண்ட அந்த சீலிங் ஃபேனை பார்த்து பார்த்து கதறினார். பிறகு திடீரென அந்த கட்டிலின் மீது ஏறி பிடித்து தொங்கினார். 

என் பொண்ணு எப்படி இதில் தற்கொலை செய்து கொள்ள முடியும்?

"இது எனக்கே இப்படி எட்டுதே, என் பொண்ணு எப்படி இதில் தற்கொலை செய்து கொள்ள முடியும்?" என்று கேட்டு கொண்டே கதறினார்.

பிறகு ரூமையே சுற்றி சுற்றி வந்தவர், "சித்ரா நீ எங்கம்மா இருக்கே?" என்று கேட்டபடியே இருந்தார். 

அந்த ரூமில் சித்ராவின் டிரஸ்கள், மேக்கப் பொருட்கள், மற்றும் கடைசியாக பயன்படுத்திய பொருட்கள் என் எல்லாவற்றையும் பேக் செய்து கொண்டு வெளியே சென்றார். 

சித்ரா அம்மா அந்த ரூமில் நடந்து கொண்டதை பார்த்ததும் உடனிருந்தோரும் கலங்கி அழுதனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings