நோய் எதிர்ப்பு சக்தி எமது உடலில் எவ்வாறு செயல்பெறுகின்றது !

0

நாம் உள்வா ங்கும் மூச்சுக் காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளை விக்கும் பாக்டீரி யாக்கள்,
நோய் எதிர்ப்பு சக்தி

வைரஸ்கள், நுண் கிருமிகள் போன் றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. 

ஆனால் இவை அனைத் தையும் நம் உடலுக்குள் நுழைய முடி யாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனை யே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம். 

எதிர்ப்பு சக்தி வகைகள்: நமது உடலில், 
எதிர்ப்பு சக்தி வகைகள்
1. இயற்கை யான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), 

2 . தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity), 

3 . உடன் பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) 

என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். 

1 . இயற்கை யான எதிர்ப்பு சக்தி (Innate Immunity) 
இயற்கை யான எதிர்ப்பு சக்தி - Innate Immunity
இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும் போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப் பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே 

மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதி களில் உள்ளே உள்ள சவ்வு களும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகி ன்றன.

இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமி களிடம் இருந்து காப் பாற்றக் கூடியவை. அடுத்த படியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமி களை தாக்கி அழிக்கக் கூடியவை களான

வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிரு க்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக ளாகும்.

2 . தகவமைக் கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity) 
தகவமைக் கப்படும் எதிர்ப்பு சக்தி - Adaptive Immunity
இரண்டாவது வகையான தகவமைக் கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளி டமிருந்து காப்பாற்றிக் கொள்வ தற்காக,

தாக்கும் நோய்க ளுக்குக் காரண மான ஒவ்வொரு பாக்டீரியாக் களுக்குத் தகுந் தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். 

இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

3 . உடன் பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) 
உடன் பாட்டு எதிர்ப்பு சக்தி - Passive Immunity
மூன்றாவது வகை யான உடன் பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப் படும் போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலி கமாக பெறுதல்.

உதாரண மாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தை க்கு தாய்ப் பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலி கமாக கிடைக் கிறது. 

மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டா னஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல் படுகிறது? நோய்க் கிருமிகள் நுழையும் போது, அதனை எதிர்த்து போரிடு வதற்கான நுட்ப மான கட்ட மைப்பு நமது உடலில் செயல் படுகிறது.

இந்த செயல் பாட்டின் போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணு யிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல் படுகின்றன. 

நாள மில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும் புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல் பாட்டில் முக்கிய பங்கு வகி க்கின்றன.
நாள மில்லா சுரப்பிகள்
ரத்த த்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல் படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பி களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன.

இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய் க்குக் காரண மான கிருமி களை அழிக் கின்றன. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல் படுகிறது.

அதன் பெரும் பாலான செயல் பாடுகள் நம்மை அறியா மலே நிகழ் கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வி யடையும் போது தான் அதன் அறி குறிகள் நமக்குத் தெரியத் தொடங் குகின்றன.

காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவை யெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போரா டுகிறது என்பத ற்கான அடையா ளங்களே ஆகும். 

அப்போது ஏற்படும் அதிக பட்ச வெப்ப நிலை தான் காய் ச்சலாக உணரப் படுகிறது. சளியின் வழி யாக கிருமிகள் அப்போது வெளி யேற்றப் படுகின்றன. 

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும் போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்ப தற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகி ன்றன.

இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்று வதைத் தடுக் கின்றன. வெள்ளை அணு க்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொ ன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க் கிருமி களை எதிர்த்து போராடு கின்றன.

நோய் எப்போது ஏற்படுகிறது? 
நோய் எப்போது ஏற்படுகிறது?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கி ன்றன. ஊட்டச் சத்துக் குறைவி னாலும் நோய் ஏற்படு கின்றன.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறை வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

அவற்றில் சில: 

1. பலகீன மான உடல மைப்பு

2. மன அழுத்த த்தைக் கொடுக்கும் வேலைகள்

3. அலர்ஜி ஏற்படுத்த க்கூடிய சூழலில் வாழ்வது

4. மது, போதைப் பொருள் பழக்கம்

5. புகைப் பழக்கம்

6. தூக்க மின்மை

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப் படுத்தி நோய் எதிர்ப் பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க் கசாக் கடை, கழிவு நீர் தேங்குதல், சாலை யோரத் தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகிய வற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்கு கின்றன.

அதனால் நாம் தங்கு மிடத்தை சுகாதா ரமாக வைத்தி ருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும். கை குலுக்குதல், தொலைபேசி உபயோ கித்தல், 

கதவின் கைப் பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.
கிருமிகள் தொற்ற வாய்ப்பு
இந்த ஒவ்வொரு செயல் பாட்டிற் குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். 

கையு றைகள் போன்ற வற்றை அணியும் முன் அவை முறையாக சுத்தப் படுத்தப் பட்டு ள்ளதா என்பதை கவனத் தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ள வர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டு மின்றி உங்களைச் சுற்றி இருப்பவர் களையும் பாதிக்கும். மன அழுத்த த்தைத் தவிர்க்க வேண்டும்.

நெகிழ் வாகவும் மகிழ்ச்சி யுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத் தன்மை வெளியேற்ற ப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரி க்கிறது.
புகை பிடிக்கும் பழக்கம்
நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசிய மான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவா கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறை யாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரி க்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. 

கடலை, சூரிய காந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதார மான சத்துக் களை அதிகரி க்க உதவும்.

வேதிப் பொருள் கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப் பட்ட பொருட்கள், பதப் படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்ற வற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மை யை (Free radicals) உண்டாக் குகிறது.

சர்க்கரை யின் அளவை கட்டுப் பாட்டில் வைத்தி ருக்க வேண்டும். சர்க்கரை யின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்தி ற்கு குறைத்து விடுகிறது. 
எண்ணெயில் வறுத்த உணவு
காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்து வரை அணுகி உடலை பரிசோ தித்துக் கொள்ள வேண்டும். 

மருத்துவ பரிசோ தனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

நோயில்லா பெரு வாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். 

அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங் களோடு (Healthy life style) வாழ்வதே.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings