பாஜக பலே வியூகம்... அசைன்மென்ட் ஒதுக்கி அதிரடி !

0

வரப்போகிற தேர்தல் அதிமுக, திமுகவுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பாஜகவுக்கும் முக்கியமான ஒன்றாகி விட்டது. 

பாஜக பலே வியூகம்
நாட்டின் முக்கால் பகுதியை தன் கையில் வைத்துள்ள நிலையில், தமிழகத்தை மட்டும்  இதுவரை தன் பிடியில்  கொண்டு வர முடியவில்லை. 

ஆனால் இந்த முறை அந்த தாமரையை மலர வைத்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் படுசுறுசுறுப்பாக பாஜக தேர்தல் யுக்திகளை செய்து வருகிறது. அதில் பல வியூகங்களை கையில் எடுத்துள்ளது. 

இதை அடிப்படையாக வைத்து ஒரு சில அசைன்மென்ட்டுகளையும் அக்கட்சிக்கு ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அந்த வகையில் அமித்ஷாவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசிய அதிமுக தலைமை வெறும் 5 சீட்டில் தான் ஆரம்பித்தனராம். ஆனால் எதற்கும் தளராத அமித்ஷா மெல்ல மெல்ல பேசி சீட் எண்ணிக்கையை  20 என்று முடிந்துள்ளார். 

பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !

60 கேட்டால் 20 தருகிறாரே என்று முதல்வரின்  சாமர்த்தியத்தை கண்டு வியந்து போன அமித்ஷா, இருந்த போதிலும் 20 ல் 10 இடத்திலாவது நாம் நம் கட்சியை நிலை நாட்ட வேண்டும் அதாவது, வென்று காட்ட வேண்டும் என்ற முடிவில் உள்ளார்களாம்.

பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே தேர்தல் பணிகளை துவக்கி மக்களை சந்தித்து வருகின்றனர். 

நுாற்றுக்கு நுாறு என்று அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எல்.முருகன் நேற்றைய தினம் கூட நம்பிக்கையுடன் சொல்லி இருந்தாலும், 

20-ல் 10 தொகுதிகளில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற பிளான்கள் வகுக்கப்பட்டு வருகிறதாம்.

எம்பி தேர்தலில், மண்ணை கவ்வ காரணமே, ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக கூட்டணியின் ஒத்துழைப்பு சரிவர கிடைக்காததே. 

வைரம் பற்றிய நாம் அறியா விஷயங்கள் !

ஆனால் அதை சரிகட்டும் விதமாக தற்போது இறங்கி உள்ளதாம். எந்த வித லோக்கல் பாலிட்டிக்ஸ் ஆக இருந்தாலும், அதை உடனுக்குடனே பேசி தீர்த்து கள வேலையில் ஜரூராக ஈடுபட வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளதாம். 

அடுத்ததாக, யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளார்களே, அவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது அடுத்த அசைன்மென்ட்டாக இருக்கிறது. இது திமுக என்றில்லை, 

எந்த கட்சியாக இருந்தாலும், சீட் கிடைக்காதவர்களை குறி வைத்து தன் வியூகத்தை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பாஜக பலே வியூகம்... அசைன்மென்ட் ஒதுக்கி அதிரடி

அது மட்டுமல்ல, அதிமுகவில் மீது அதிருப்தியில் உள்ள மூத்த தலைகள் போன்றவர்களை பாஜகவுக்குள் இழுக்கும் முயற்சிகளையும் கையில் எடுக்கும்படி உத்தரவு போட்டுள்ளதாம். 

அப்படி யாராவது சிக்கினால், உடனே சீட் தர தயாராக உள்ளதாக பாஜக தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. 

இது தான் அதிமுக, உட்பட பல கட்சிகளை கலக்கத்திற்கு உள்ளாக்குகிறது. மேலும் பாஜக குறி வைத்துள்ள 10 தொகுதிகளில் திமுகவே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.  

வழக்கமாக தேர்தல் முடிந்த பிறகு தான் பாஜகவின் அதிரடி ஆரம்பமாகும். ஆனால் தேர்தல் சமயத்திலும் பாஜக பலே வியூகம் அமைத்து வருவது மற்ற கட்சிகளையே வியப்பில் ஆழ்த்தி வருகிறதாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings