2.7 லட்சத்தை முதலாளியின் ஏடிஎம்மில் இருந்து எடுத்த சமையல்காரர் !





2.7 லட்சத்தை முதலாளியின் ஏடிஎம்மில் இருந்து எடுத்த சமையல்காரர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

ஒரே வருடத்தில் ரூபாய் 2.7 லட்சத்தை முதலாளியின் ஏடிஎம் கார்டில் இருந்து சமையல்காரர் ஒருவர் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2.7 லட்சத்தை முதலாளியின் ஏடிஎம்மில் இருந்து எடுத்த சமையல்காரர்
நாம் நமது டெபிட் காடுகளில் பின் நம்பரை மறந்து விடக்கூடாது என்பதற்காக பின்புறமுள்ள அட்டையில் எழுதி வைப்பது வழக்கம். 

அவ்வாறு தான் தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள வனஸ்தாலிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசபுரம் காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

30 லட்சம் பைக்கை நிறுத்திய போலீசார்... காரணம் என்ன தெரியுமா?

காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, புகார் அளித்தவரின் சகோதரி அமெரிக்காவில் இருந்து பணத்தை அனுப்புவதை அவருடைய வீட்டில் வேலை செய்து வந்த லட்சுமி நாராயணன் என்ற சமையல்காரர் அதனை நோட்டமிட்டு உள்ளார்.  

புகார் அளித்தவரின் டெபிட் கார்டு வீட்டில் இருந்த மேசையில் இருப்பதையும் அதன் அட்டையில் எழுதப்பட்டுள்ள பின் நம்பரையும் கவனித்து வைத்துள்ளார். 

அமெரிக்காவில் நடந்தது
காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக பேசும் போது, சமையல்காரர் வீட்டில் இருந்து பலமுறை டெபிட் கார்டை எடுத்துச் சென்றுள்ளார். 

வனஸ்தாலிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை எடுத்துள்ளார்.  பின்னர், அந்த கார்டை அதே இடத்தில் சென்று வைத்துள்ளார். 

வீட்டில் இருந்தவர்கள் சமையல்காரரை சந்தேகிக்க தொடங்கியதும் அந்த நபர் வீட்டில் வேலை செய்வதை நிறுத்தி விட்டு பெங்களூருக்குச் சென்றுள்ளார். 

பெண்களின் முலைகளை வெட்டி வீசுங்கள் - கொடூர தண்டனை தெரியுமா?

திருடிய பணத்தை அதிகளவில் செலவு செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தனது முதலாளியின் டெபிட் கார்டை அவருக்கு தெரியாமல் எடுத்து சென்று 

அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுத்து பின்னர் மீண்டும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் எடுத்த இடத்தில் வைத்துள்ளார். இப்படி பலமுறை பண மோசடி செய்து வந்துள்ளார்.

பலமுறை பண மோசடி

பின்னர் பணம் அனுப்பிய சகோதரி இந்தியாவிற்கு வந்த போது பண பரிவர்த்தனையை சரி பார்க்கும் போது தான் இந்த உண்மை தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் அனைவரையும் விசாரிக்கும் போது இவர் தான் பணத்தை எடுத்து தெரிய வந்தது. 

பள்ளியிலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி !

இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். இனிமேல் யாரும் டெபிட் கார்டுக்கு பின்புறம் தனது பின் நம்பரை எழுதி வைக்க வேண்டாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)