சசிகலாவிடம் சாய்கிறதா அதிமுக... என்ன நடக்கிறது !

0

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகியுள்ள நிலையில் பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வருவது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

சசிகலாவிடம் சாய்கிறதா அதிமுக
சசிகலா பூரண குணமடைந்து வந்தால் சந்திப்பேன் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கூறியுள்ளார். இதே போல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து ஒட்டப்படுகிறது.

ஓபிஎஸ்-இன் மகன் சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவிக்கிறார். இத்தனை ஆண்டு காலம் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதை சமாளிப்பது சற்று கடினம் தான்.

ஏனென்றால் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி மருத்துவமனையில் இருக்கும் போதே இவ்வளவு ஆதரவு குரல் எழுகிறது என்றால் தமிழகம் வந்தால் நிச்சயம் அது கூடும் என்பது உறுதி.

அதனால் சசிகலா வருகை தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தான் தெரிகிறது.

பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், சசிகலா பூரண குணமடைந்து வந்தால் அவரை சந்திப்பேன். 

ஒரு ட்வீட் செய்ய 19 கோடியா? அதிர்ச்சி தகவல் !

எனக்கு எம்எல்ஏ சீட்டு கொடுத்தது ஜெயலலிதா தான். ஆனால் அதற்கு உறுதுணையாய் இருந்தவர் சசிகலா. அந்த நன்றி கடனுக்காக அவரை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இப்படி சொல்லாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது சசிகலா தமிழகம் வந்ததும் தெரிய வரும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings