24 மணி நேரத்தில் 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை - சாதனை !

0

இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த நிலையில், முதலாவது சாதனை 12 ஆயிரம் டன் சிமென்ட் கான்கிரீட் கலவையை உற்பத்தி செய்தது. 

24 மணி நேரத்தில் 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை
இரண்டாவது சாதனை கலக்கப்பட்ட கான்கிரீட்டை மிக வேகமாக இடுவது, மூன்றாவது சாதனை ஒரு அடி தடிமன் மற்றும் 18.75 மீட்டர் அகலம் கொண்ட கட்டுமானம் செய்தது என்பதாகும். 

நான்காவது சாதனை, தரத்தில் எந்தவித சமரசமும் செய்துக் கொள்ளாமல் நடைபாதையை பராமரிப்பது. இந்த பணிகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டன.

24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமெண்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. 

இதற்காக, 1.10 லட்சம் மூட்டை சிமென்ட் (5.5 ஆயிரம் டன்) 500 டன் பனியும் பயன்படுத்தப்பட்டன.

மேலும், இந்த சாதனை மிகப்பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இந்தியாவின் சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய சாதனையாக பதிவு செய்யப்படுகிறது. 

இந்த அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் வதோதரா (Vadodara) நகரை மும்பை மற்றும் டெல்லியுடன் நேரடியாக இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை (Expressway)இது.

தோசை மொறு மொறுன்னு ஹோட்டல் தோசை போல வேண்டுமா?

கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Golden Book of World Records), மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) என 

இரண்டு சாதனைப் பதிவுகளில், 2 மணி நேரத்தில் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்ட இந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)