தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றிய முகம்மது சிராஜ் !

0

கிரிக்கெட் உலகத்தில் சாமானியர்களின் வெற்றியை கொண்டாடும் போது நமக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஏற்படும்.

தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றிய முகம்மது சிராஜ் !
சேலம் சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜனை எந்தளவுக்கு நாம் கொண்டாடுகிறோமோ ? அதே அளவு கொண்டாடப்பட வேண்டியவர் முஹம்மது சிராஜ், இவருடைய தந்தை ஒரு ஆட்டோ டிரைவர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இன்று சாதித்து காட்டியுள்ளார். இவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்து அங்கு சென்ற போது தான் இவருடைய தந்தை காலமானார்.

முஹம்மது சிராஜ்க்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவர் தந்தையின் கனவு மகன் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பது தான். 

அதை நினைவு கூர்ந்து, நாம் இப்போது இந்தியா சென்று தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பயிற்சி போட்டியிலும், பங்கேற்க முடியாது. 

கற்பூரம் தரும் நன்மைகள் என்ன?

பயிற்சி போட்டியில் பங்கேற்றால், மட்டுமே ஆடும் அணியில் இடம் கிடைக்கும் என்பதால் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்து தனது திறமையான பந்து வீச்சால் கடைசி போட்டியில் 

தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றிய முகம்மது சிராஜ் !

ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்றால் மிகையல்ல, சாமானியர்களின் வெற்றியை கொண்டாடுவோம்!

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்

விளக்கம்: மகன் தன் தந்தைக்குச் செய்யதக்கக் கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ? எனப் பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

இயற்கையான உணவுகள் நோயில்லா வாழ்வை கொடுக்கும் !

இந்த குறளுக்கு ஏற்ப முகமது சிராஜ், தனது தந்தைக்கு இந்திய டெஸ்ட் வெற்றியைக் கைம்மாறாக அளித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)