பணத்தை தொலைத்ததால் இளைஞர் தற்கொலை !

சென்னை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மதன்குமார் (23). இரண்டு நாட்களுக்கு முன் மதன்குமாரிடம் அவரது பெற்றோர், 48 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளனர்.
பணத்தை தொலைத்ததால் இளைஞர் தற்கொலை !
அந்த பணத்துடன் வெளியே சென்ற போது என்ஜிஓ காலனி பகுதியில் சிலர் வழிமறித்து பணத்தை பறித்து சென்றதாக பெற்றோர்களிடம் மதன்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழிப்பறி நடந்ததாக கூறப்படும் பகுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். 

அப்படி எதுவும் நடக்கவில்லை என தெரிய வந்தது. இதனால், வேறு வழியில் பணத்தை தவற விட்டதாக மதன்குமாரை பெற்றோர் கண்டித்துள்ளனர். 
இதில் மனமுடைந்த அவர், குடிபோதையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
டைனோசரின் ராட்சத தொடை எலும்பு?
இந்த சம்பவமம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: