வயாகரா பயன்படுத்துபவர்களுக்கு சில தகவல்கள் !

0
வயாகரா மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நமது உடலில் காணப்படுகிற PDE 6 என்ற நொதிப்பொருள் கட்டுப் படுத்தப் படுகிறது. 
வயாகரா பற்றி சில தகவல்கள்
எனவே, இம்மாத் திரையை உட்கொண்ட பின்னர், சில மணிநேரம் பார்வைத்திறன் குறையும். 

ஆகவே அதிக பொறுப்புணர்வு, விழிப்புணர் வுடன் செயல்பட வேண்டிய ரயில் ஓட்டுநர்கள், விமான ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் இந்த மாத்திரையைச் சாப்பிட்ட பிறகு, ஆறு மணி நேரம் பணியில் ஈடுபட தடை இருக்கிறது.
* மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்துக்குள் ஒருவருக்கு நெஞ்சு வலி, கண்களில் கோளாறு ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல், மருத்துவரை அணுகுவது உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்ள வழிகோலும்.

* வயாகரா மாத்திரை பாலுணர்வைத் தூண்டக்கூடியது என பலரும் நினைக் கின்றனர். ஆனால், அது உண்மை கிடையாது. 

ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறை பாட்டைச் சரி செய்து, தாம்பத்ய உறவில் நீண்ட நேரம் நீடிக்க செய்வதுதான் இந்த மாத்திரையின் தலையாய பணி ஆகும்.
* அமெரிக்க அரசாங்கம் பெண்களுக்கான வயாகரா மாத்திரைக்கு அனுமதி தந்துள்ளது. இந்த மாத்திரைக்கு ஃபிலிபான்செரின் என பெயரிடப்பட்டு உள்ளது. 

ஒரே நோக்கத்திற் காக இந்த மாத்திரை தயாரிக்கப் பட்டாலும், பயன் தருவதில் வேறுபாட்டு தன்மையுடன் தான் காணப்படுகிறது.
* ஆண்களுக் கான வயாகரா விறைப்புத் தன்மைக்கு உதவுவது போல, பெண்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்ட உதவுகிறது. ஆனால், பயன் தருவதில் இரண்டுக்கு மிடையே வித்தியாசம் இருக்கிறது. 

ஆண்களுக் கான வயாகரா சாப்பிட்ட அரைமணி அல்லது ஒரு மணி நேரத்துக் குள்ளாகவே பலன் கொடுக்கும். 

பெண்களுக் கான வயாகரா வானது மகளிர் மாதக் கணக்கில் உட்கொண்டால் தான் எதிர்பார்த்த பலன் கிடைப்பதாக செக்சாலஜிஸ்ட் தெரிவிக்கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)