நான் செட்டில் ஆகி விட்டேன் இனி தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்... நித்யானந்தா !

0
நான் செத்து போய்ட்டேன். இனிமேல் நான் தமிழ்நாட்டுக்கு👈 வரமாட்டேன்  என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
நான் செட்டில் ஆகி விட்டேன் இனி தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்... நித்யானந்தா !
பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல் என ஏராளமான குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிப்பவர் நித்தியானந்தா.. 

வழங்கப்பட்ட ஜாமீனும் ரத்தாகிய நிலையில் திரும்பவும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டும் பிடிக்கப் பட்டுள்ளது.

இவர்  எந்த திசையில் இருக்கிறார் என்று இன்னமும் நம் போலீசார் தேடி  கொண்டே இருக்கும் இந்த  நிலையிலும் எந்த கவலையும் இல்லாமல் தினம் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் சொன்னது: "கைலாசத்திற்கான👈 பணிகள்  அனைத்தும் முடிந்து விட்டன. 

20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.. 
நான் செட்டில் ஆகி விட்டேன் இனி தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்... நித்யானந்தா !
சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கி விட்டன.

என்னுடைய மரணத்திற்கு பிறகு  என்னுடைய  சொத்துக்கள்  யாரை  சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துள்ளேன். 

அது தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்கு தான் சேரும்.

தமிழ்நாட்டுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை.. தமிழ்நாட்டுக்கு இனிமேல் வரப்போவது மில்லை.. 

தமிழக ஊடகங்களை பொறுத்த வரை தான் செத்து போய்  விட்டேன் .நான் இறந்தாலும், என் உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்.. 
இனி தமிழ்நாடு வரமாட்டேன்
வாடிகனை போல இந்து மதத்திற்கு என ஒரு நிலத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது" என்கிறார்..

இதனால் நித்யானந்தா👈 பக்தர்களும், விசுவாசிகளம் குதூகலமடைந்து உள்ளனர்.. 

அந்த கைலாசா எப்படி இருக்கும், அதை பார்க்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பு எப்போது வருமோ என்றும் ஆவலுடன் காத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)