ஆன்டி ஆக்ஸிடன்டுகள் என்பது எப்படி செயல்படுகின்றன?

டயட்டீஷியன்களும்,  டாக்டர்களும், மீடியாக்களும் அடிக்கடி குறிப்பிடுகிற ஒரு வார்த்தை ஆன்டி ஆக்ஸிடன்ட். அதென்ன ஆன்டி ஆக்ஸிடன்ட்? எதற்கு அவசியம்? 

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் என்பது?
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கி விடும். 

மின்சாரத்தின் அளவு குறைய Fan Regulator -யை மாற்றவும் !

எனவே உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. 

Oxidants-க்கு எதிராக செயல்பட்டு நம்மைக் காக்கும் சத்துமிக்க உணவு மூலக்கூறினைத் தான் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறோம். 

இத்தகைய ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைய உணவுகளில் உள்ளன.காய்கறிகளிலும், பழங்களிலும், கீரைகளிலும் அதிகம் நிறைந்துள்ளது இந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள்.

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் எப்படி செயல்படுகின்றன?

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். செல்களில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். 

உடலில் உள்ள நோய்களை கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் வல்லமை கொண்டது. 

இது செல்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் புற்றுநோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. 

செல்கள் தொடர்பான அனைத்து நோய்களை குணப்படுத்துவதிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கியப் பங்காற்றுகிறது.

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் எவற்றில்  மிகுந்து காணப்படுகிறது?

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் எவற்றில்  மிகுந்து காணப்படுகிறது?

ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் என்பன கரோட்டினாய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள், மெலடோனின், வைட்டமின்களில் ஏ, இ, சி, 

பைட்டோ கெமிக்கல்களான பீட்டா - கரோட்டீன் மற்றும் லைகோபைன் மற்றும் தாது சத்துக்களான செலீனியம் மற்றும் ஜிங்கு போன்றவை. 

இவை அனைத்து உடலில் போதிய அளவு இருந்தால், உடலில் உள்ள ரேடிக்கல்கள், கழிவுகளாக மாற்றப்பட்டு, மலம் மற்றும் 

சிறுநீர் வழியே வெளியேற்றப்படும். எனவே தான், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் முக்கியமாக தேவைப்படுகிறது.

மஸ்கட் திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா? 

எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டியுள்ளது. 

வைட்டமின் ஏ, இ, சி நிறைந்துள்ள உணவுகளில், காய்கறிகள், பழங்களை உட்கொள்ளும் போது நமக்கு அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கிடைக்கிறது. 

கேரட், கீரை, ப்ரக்கோலி, முட்டை, பட்டாணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி போன்றவற்றை நாம் தொடர்ந்து உட்கொள்ளும் போது நமக்கு அது அதிகப்படியான ஆன்டி  ஆக்ஸிடன்டை தருகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்டுகளால் ஏற்படும் நன்மைகள்?

ஆன்டி ஆக்ஸிடன்டுகளால் ஏற்படும் நன்மைகள்?

நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிகளவு ஆன்டி  ஆக்ஸிடன்ட் தேவைப்படுகிறது. 

எனவே, ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துமிகுந்த உணவுகளை உட்கொள்ளும் போது இந்த நோய்களிலிருந்து தப்பலாம். 

இதயம் தொடர்பான நோய்களை தடுத்து சேதமடைந்த செல்களுடன் எதிர்த்துப் போராடி அவற்றிலிருந்து நம்மை காக்கவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உதவுகிறது.

கை விரல்களை தேய்த்தால் முடி வளரும் !

இது தவிர அழகு சிகிச்சையிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கிய இடம் வகிக்கிறது. சருமம் மற்றும் முடி சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. 

தொடர்ந்து ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை உண்ணும்போது சருமத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி முகம் பொலிவு பெறுகிறது.

அழகு சிகிச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்தும் போதும் விரைவாகவும் நல்ல பலன் கிடைக்கிறது. 

உடலுக்கு சோர்வு நீக்கி, புத்துணர்வு தரும் வேலையைச் செய்வதும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தான்.

எப்போது அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவை?

எப்போது அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவை?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது அனைவருக்கும் நன்மை அளிப்பதால் அனைத்து வயதினருக்கும் இதன் தேவை உள்ளது. 

புற்றுநோய், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னையின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவைப்படுகிறது. 

பெண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் ! 

இதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும் இது அதிகம் தேவைப்படுகிறது. 

மிக அரிதாக ஒரு சில நேரங்களில் மட்டுமே நுரையீரல் நோயின் தீவிரத்தைப் பொறுத்து, சிலருக்கு உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அளவை கட்டுப்படுத்த நேரிடும். 

ஆனால், இது தவிர்த்து அதன் தேவையே உடலுக்கு எப்போதும் அதிகம் உண்டு.

தொழில் சார்ந்த நோய்கள்:

தொழில் சார்ந்த நோய்கள்:

சில துறைகளில் அன்றாட அலுவலகப் பணிகள் இன்று அதிக பணிச் சுமையுடனும், மன உளைச்சல் மிகுந்ததாகவும் உள்ளது. 

கம்ப்யூட்டர் துறை, சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பணிகளில் உள்ளோருக்கு ஏற்ப உணவு முறைகள் பந்துரைக்கப்படுகின்றன. 

கம்ப்யூட்டர் துறைகளில் பணிபுவோர் அதிகம் பாதிக்கப்படுவது உடல் பருமன் பிரச்னையால் தான். 

பணிச்சுமையால் உணவைத் தவிர்ப்பது, ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பண்டங்களை சாப்பிடுவது, 

புரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் !

பாட்டில்களில் அடைக்கப்படும் குளிர் பானங்களைக் குடிப்பது, அதிகளவில் இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வது போன்றவை தான் இப்பிரச்னைக்கு முக்கியக் காரணம்.

எனவே, ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

டாக்டர்களும், டயட்டீஷியன்களும் இதற்காகத் தான் காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.

அவர்களின் மன உளைச்சலைக் குறைக்க சமச்சீரான உணவுடன் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.

Tags: