தன் மகனை வயரால் கழுத்தை இறுக்கி கொன்ற தந்தை !

0

திருவள்ளூர் மாவட்டத்தில் குறும்பு செய்ததற்காக தன் மகனை தந்தையே செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தன் மகனை கொன்ற தந்தை !
கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னச்சோழியம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் முத்து (42). இவருடைய மகன் கார்த்திக் (11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5 -ம் வகுப்பு படித்தார்.

கடந்த 3ம் தேதி அந்த சிறுவனை காயங்களுடன் பெற்றோர்கள் கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள்,  சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் தாய் நீலா (34) கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் தன் மகன் சாவில் தனக்கு சந்தேகம் இருப்பதாக புகார் ஒன்றை கொடுத்தார். 

அந்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் சிறுவன் கார்த்திக்கின் 👉உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அந்த சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதனால், சிறுவன் கார்த்தியின் தந்தை முத்து மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, மகனை கழுத்தை நெரித்து தானே கொன்றதை முத்து போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
கர்ப்பிணி பெண்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் ! 

மேலும் போலீசார் முத்துவிடம் தீவிரமாக நடத்திய விசாரணையில், சிறுவன் கார்த்திக் வீட்டில் அதிகமாக சேட்டை செய்வது வழக்கமாம். இப்படி சேட்டை செய்வது முத்துவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது.. 

இதனால், ஆத்திரமடைந்த முத்து தனது 👉மகனை சரமாரியாக தாக்கி செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து முத்து மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

சேட்டை செய்ததற்காக பெற்ற மகனையே தந்தை கொலை செய்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)