நாய்கள் சேர்கையின் பொழுது பிரிக்க முடியாமல் மாட்டிக் கொள்வது எதனால்?

0
குளிர் காலம் முடியும் நேரத்தில் நாய்களின் இனப்பெருக்க காலம் தொடங்குகிறது. அப்பொழுது பெண் நாய்களிடமிருந்து ஒரு திரவம் வெளிப்படும். இந்த ஈஸ்ட்ரஸ் 10-12 நாட்கள் நீடிக்கும். 
நாய்கள் சேர்கையின் பொழுது பிரிக்க முடியாமல் மாட்டிக் கொள்வது எதனால்?
அப்போது அது போகுமிடமெல்லாம் தன் பாதச்சுரப்பியின் மூலம் ஒருவித வாசனை யை ஆண் நாய்களுக்கு “ அழைப்பாக” விட்டுச் செல்லும், இந்த வாசனை யால் குஷியான ஆண் நாய் (குதூகலமாக, மிடுக்காக கிளம்பி விடும். 

தனக்கேற்ற இணையைக் கண்டறிந்தவுடன் தன் காதல் கோரிக்கையை பவ்யமாக வைக்கும். இதை ஆரம்பத்தில் கேர்லெஸாக எடுத்துக் கொள்ளும் பெண் நாய் தன் வாலை அட்ஜெஸ்ட் செய்து கர்வ நடை காட்டும். 

அதெல்லாம் கொஞ்சநேரம் தான், பின் ஆண் நாயின் கொஞ்சும் குரலிலும், முகபாவத்திலும் சொக்கி போய், பிரிக்க முடியாத அளவிற்கு ஆண் நாயுடன் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் பெண் நாய். 
ஆண் நாயின் பிறப்புறுப்பில் விசேஷமாக தண்டில் குருத்தெலும்பு இருக்கும். பெண் நாயின் “உள்ளே” நுழையும் போது அது நார்மலாக தான் இருக்கும்! 

அதனால் நுழையும் போது தடங்கல் இல்லை! சேர்கையின் உச்சத்தில் ஆண் நாயின் பிறப்புறுப்பில் இருக்கும் குருத்தெலும்பு (Os pedis) சேர்க்கையின் போது ஆண் உறுப்பின் பல்ப் பகுதி பொங்கும் குருதியினால் வீங்கி விடும். 

அப்படி அது வீங்குவதாலும், சுற்றி உள்ள பெண் உறுப்பு பகுதி ஆசையாக பாசப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் போது? 
நாய்கள் சேர்கையின் பொழுது பிரிக்க முடியாமல் மாட்டிக் கொள்வது எதனால்?
அது மாட்டிக் கொள்வதால் சேர்க்கை முடிந்த பிறகு அரை மணி நேரத்திற்கு விடுபட முடியாத பேரின்ப? துன்பம்? நிலையில் வெட்கத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் இருக்கும்! 

அவைகளின் உணர்வுகளையும் புரிந்து கொள்வோம். பணக்கார நாய்களின் சேர்க்கைக்கு பெரும் கிராக்கி இதே சமூகத்தில் தான் இருக்கிறது. தனியாக வியாபார நிலையங்கள். 

ஒரே இனத்தினைச் சேர்ந்த நாய்களை தேடி இணைக்கும் பணியென ஏராளம். ம்.. ஏழை என்றால் நாய்க்கு கூட கல்லடி தான்?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)