ரபேல் ஊழல் பற்றிய சர்ச்சை கேள்விகள் படியுங்கள் !

0
பிரதமர் மோடி, 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்கோசிஸ் ஹாலண்டேவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்கப்படும் என அறிவித்தார்.
36 ரபேல் ரக போர் விமானங்கள்



2016ம் ஆண்டு ஜனவரி குடியரசு தின விழாவில் பங்கேற்க ஹாலண்டே வந்த போது ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டது.

ஒப்பந்தம் இறுதி செய்ய முடிய வில்லை

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் என்ற நிறுவனம் தான் ரபேல் விமானங் களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்துடன், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 126 ரபேல் விமானங்கள் வாங்க பேச்சு வார்த்தை நடத்தியது. 

இதில், 18 விமானங்கள் முழுமையாக பறக்கும் நிலையில் அளிக்கப்பட வேண்டும். மீதியுள்ள 108 விமானங்கள், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனத் துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும். 

ஆனால், டசால்ட் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் ஐ.மு., கூட்டணி அரசால் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிய வில்லை. ரபேல் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு சமரசம் செய்து விட்டது; 
மலச்சிக்கலால் இந்த பெண்ணுக்கு 10 வருஷம் மறந்து போச்சாம் !
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ்  டிபென்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது என ஓராண்டாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. 

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே வெளியிட்ட தகவல், அதற்கு டசால்ட் நிறுவனம் தெரிவித்த எதிர்ப்பு, பிரான்ஸ் அரசு தெரிவித்த மறுப்பு ஆகியவை பிரச்னையை பெரிதாக்கி விட்டன.

6 கேள்விகள், 6 பதில்கள்: அந்த வகையில் எழும் 6 கேள்விகளும், அதற்கான பதில்களும்:

1. ஐ.மு.,கூட்டணி 126 ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்தது. மோடி அரசு 36 விமானங்களை மட்டுமே வாங்க முடிவு எடுத்தது ஏன்?

ப: மோடி அரசு பதவியேற்ற போது, ஒப்பந்தம் ரத்தாகும் நிலையில் இருந்தது. அதற்கு காரணம் இந்தியாவில் இந்த விமானத்தை உற்பத்தி செய்யும் விஷயத்தில் டசால்ட் 

மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனங் களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது.  மற்றொரு புறம், இந்திய விமானப்படைக்கு அனுமதிக்கப்பட்ட படை பிரிவு எண்ணிக்கை, 42. ஆனால், 33 படை பிரிவு தான் செயல்பாட்டில் இருந்தன. 



தற்போது படைப்பிரிவு எண்ணிக்கை 31 ஆக குறைந்து விட்டது. படைப்பிரிவு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், அவற்றை சரி கட்ட, விமானப் படைக்கு அவசரமாக போர் விமானங்கள் தேவைப் பட்டன.

போர் விமான தொழில்நுட்ப பரிமாற்றம், உள்நாட்டில் உற்பத்தி செய்வது போன்ற விஷயங் களுடன் கூடிய ஒப்பந்தத்தை மேற்கொள்வது இந்த நேரத்தில் சரியாக தென்பட வில்லை. 

இதன்படி ஒப்பந்தம் போட்டால், போர் விமானங்களை சப்ளை செய்ய பல ஆண்டுகள் ஆகும். மேலும், போர் விமானத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தனது உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டி இருக்கும். இதற்கும் பல ஆண்டு களாகும்.

எனவே, பறக்கும் நிலையில் 36 விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு எடுத்தது. விமானப்படை கூடுதல் விமானங்களை வாங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து விட்டது. 

அந்த விமானங்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன. எனவே, அவசர தேவைக்கு 36 விமானங்கள் மட்டும் வாங்கினால் போதும் என்பது மோடி அரசின் முடிவை விளக்கும் வகையில் உள்ளது.

ரபேல் விமானத்தின் விலை அதிகம். எனவே, 126 விமானங்கள் வாங்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு வசதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

ஐ.மு., கூட்டணி அரசில் ராணுவ அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி, ஒரு முறை 126 விமானங்கள வாங்க அரசிடம் போதிய நிதி இல்லை என்றே குறிபிட்டு இருந்தார்.

2. இந்த ஒப்பந்தத்தில், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் ஏன் இடம் பெறவில்லை

ப: இந்த ஒப்பந்ததில், ' மேக் இன் இந்தியா' என்ற இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற பிரிவு இடம் பெறவில்லை. எனவே, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. 

குறைந்த எண்ணிக்கை யிலான போர் விமானங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது குறைந்த செலவில் நடைபெறாது என்பதால் தான் பறக்கும் நிலையில் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இடம் பெற வில்லை என்றாலும், டசால்ட் 

மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங் களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை நிறை வேற்றும் இடத்தில் தான் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் உள்ளது.

ஐ.மு., கூட்டணி அரசில் இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்த போது அதில் இடம் பெற்ற விமான படை அதிகாரி,' டசால்ட் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இடையே தீர்க்க முடியாத அளவுக்கு 
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் தான் ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது' என, கூறியுள்ளார்.

3. ரபேல் விமானத்தை அதிக விலைக்கு வாங்குவது நியாயமா?

பாதுகாப்பு துறை நிபுணர் அபிஜித் அய்யர் மித்ரா என்பவர்,' கத்தார் நாடு ஒரு ரபேல் விமானத்தை ரூ.2,044 கோடி என்ற விலைக்கு வாங்கி உள்ளது. 
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்



எகிப்து நிறுவனம், அதே விமானத்தை ரூ.1,722 கோடி என்ற விலைக்கு வாங்கி உள்ளது. ஆனால், இந்திய அரசு ரூ.1,701 கோடி என்ற விலைக்கு தான் வாங்க உள்ளது' என்று கூறி யுள்ளார். 

எனவே, மற்ற நாடுகளை விட குறைந்த விலைக்கே இந்திய அரசு வாங்குகிறது என்பது தெளிவாகிறது. இத்துடன், இந்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தத்தில், விமான சப்ளை மட்டும் அல்லாது 

அதற்கான பராமரிப்பு உதவி, ஆயுதங்கள், பயிற்சி மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விமான படை கேட்ட கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றுள்ள தால் விமானத்தின் விலை சற்று அதிகமாகி விட்டது. 

கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் வாங்கிய விமானங்களில் இந்த கூடுதல் அம்சங்கள் இல்லை. கூடுதல் அம்சங்களுடன் அந்த நாடுகளை விட குறைந்த விலைக்கு இந்தியா வாங்க உள்ளது.
இத்துடன் விமான விற்பனை மூலம் டாசல்ட் நிறுவனத்திற்கு கிடைக்க கூடிய வருவாயில் 50 சதவீத தொகை அதாவது ரூ.59 ஆயிரம் கோடியை இந்தியாவில் அந்த நிறுவனம் மறுமுதலீடு செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு இடம் பெற்றுள்ளது. 

இது உள்நாட்டில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும். இது தவிர, ஐ.மு., கூட்டணி அரசு குறிப்பிட்ட விமானத்தின் விலை, பல ஆண்டு களுக்கு முந்தையது. 

தற்போதய பண வீக்கம், உற்பத்தி செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே விமானத்தின் விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

4. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது பாதுகாப்புக் கான அமைச்சரவை குழு மற்றும் ராணுவ தளவாட கொள்முதல் தொடர்பான பிரிவுகளை கருத்தில் கொள்ளாமல் மோடி அரசு செயல்பட்டதா?

ப: ஐ.மு., கூட்டணி அரசு ஏற்படுத்திய ராணுவ தளவாடங்கள் கொள்முதல் நடைமுறைகள் - 2013ன்படி தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. 

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் போடும் போது பாதுகாப்பு கையகப் படுத்துதல் கவுன்சில், பாதுகாப்பு கொள்முதல் வாரியம் மற்றும் அமைச்சரவை குழு ஒப்புதல் தேவை யில்லை என ஐ.மு., கூட்டணி அரசு போட்ட உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

5. இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இடம் பெற்றது எப்படி? அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மோடி அரசு செயல்பட்டதா?

ப: காங்கிரஸ் கூறுவது போல், இந்த ஒப்பந்த்தில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனம் இடம் பெறவில்லை. 

விமானத்தை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது பங்குதார நிறுவனத்தை தேர்வு செய்யும் உரிமை கொண்டதாக உள்ளது. மேலும், ரிலையன்ஸ் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. 

பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மோடி அரசு பதவிக்கு வருவதற்கு முன், டசால்ட் நிறுவனத்துடன் முகேஷ் அம்பானியின் 



ரிலையன்ஸ் நிறுவனத்தின் தளவாடங்கள் பிரிவு டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இருந்தது. ஆனால், 2014ம் ஆண்டுக்கு பிறகு முகேஷ் அம்பானி நிறுவனம் தளவாடங்கள் தொழிலில் ஈடுபட வில்லை.

அவரது தம்பி அனில் அம்பானியின் நிறுவனம் தான் டசால்ட் நிறுவனத் துடன் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு வேளை, 2012ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு இருந்தால் முகேஷ் அம்பானி நிறுவனம் தான் அதில் இடம் பெற்று இருக்கும். 
அப்போது மட்டும் தொழில் அதிபர்களுக்கு சாதகமாக அரசு செயல் படுகிறது என்ற குற்றச்சாட்டு எழாமல் இருந்திருக்குமா.

6. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, மோடி அரசை குற்றம் சாட்டுவது ஏன்?

ப: 2016ம் ஆண்டு ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்க ஹாலண்டே இந்தியாவிற்கு வந்த போது தான் ரபேல் விமானம் வாங்குவதற் கான ஒப்பந்தம் போடப் பட்டது. 

அதற்கு இரண்டு நாள் கழித்து ஹாலண்டேவின் தோழி ஜூலி கேய்ட் நடத்தி வரும் திரைப்பட நிறுவனத் துடன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டது. 
இதன் மூலம் ஒரு திரைப்படம் எடுக்கவும் முடிவு செய்யப் பட்டது என கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தி, இந்தியாவில் மட்டுமல்ல பிரான்ஸ் நாட்டிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
ரபேல் ஊழல்



அதாவது திரைப்பட தயாரிப்புக்கு நிதி உதவி அளிப்பது என்பது ஹாலண்டே பெற்ற லஞ்ச பணமா என்ற கேள்வி பிரான்ஸ் நாட்டில் எழுந்தது. 

அப்போது தான் இந்திய அரசு பரிந்துரையின் பேரில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப் பட்டது. அதை விட்டால் எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை என ஹாலண்டே விளக்கம் அளித்தார்.

அதாவது தன் மீதான ஊழல் புகாரை மறுக்கும் வகையில், மோடி அரசு மீது பழியை சுமத்தினார். அவது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசும், டசால்ட் நிறுவனமும் மறுத்து விட்டன. 

இதன் பிறகே தான் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மாறாக, 'இந்த விஷயத்தில் டசால்ட் நிறுவனம் தான் கருத்து தெரிவிக்க முடியும்' என, ஹாலண்டே 'பல்டி' அடித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)