சேலத்தில் 4 பேர் குடும்பத்தோடு தற்கொலை !

0

சேலம் வாய்க்கால் பட்டறை வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் சேலம் கோட்டை பகுதியில் உள்ள  சலூன்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

சேலத்தில் 4 பேர் குடும்பத்தோடு தற்கொலை
இவர் சேலத்தில் குடும்பத்துடன் 👉தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அன்றாட கூலித்தொழிலாளியான இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மதன்குமார், வசந்தகுமார், கார்த்திக் என்ற மூன்று மகன்களும் இருந்தனர். 

எப்போதுமே கவர்ச்சியை விரும்பும் தொகுப்பாளினி அஞ்சனா !

இந்த நிலையில் இவருடைய மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழந்தார். மதன் இறந்ததால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.  

இதனால் இந்த மனவேதனையில் இருந்த அவரின் குடும்பத்தினர் அனைவரும் எப்போதும் சோகமாகவே காட்சி அளித்த நிலையில் முருகன் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இன்று காலை வெகு நேரமாகியும் 👉வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை எட்டிப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

வீட்டின் உள்ளே முருகன் உட்பட குடும்பத்தினர் 4 பேர் சடலாமாக கிடந்ததை கண்டு உடனடியாக அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 👉சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீசார் இது தற்கொலை தானா? இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings