சூரரைப் போற்று படத்தின் திரை விமர்சனம் !

0
மதுரையில் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. இவரது அப்பா பூ ராமு, இவர் ஒரு வாத்தியார். இவர் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டும் என்று அகிம்சை வழியில் போராடி வருகிறார். 
சூரரைப் போற்று
இது பலன் அளிக்காத காரணத்தால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் வீட்டை விட்டு செல்லும் சூர்யா, ஏர்போர்ஸ் சர்வீசில் சேருகிறார். 

ஒரு காலகட்டத்தில் சூர்யாவின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அந்த சமயத்தில் அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. 
இதனால் குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் விரக்தி அடையும் சூர்யா, பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் நினைத்த நேரத்த்தில் பறக்க முடிகிறது. 

ஆனால்\ தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கிறார்கள். 

அப்படிப்பட்ட கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற குறைந்த விலையில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார் சூர்யா. இதில் பல இன்னல்கள், கஷ்டங்கள், சூழ்ச்சி, நிறுவனங்களின் தலையீடு என பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. 
விமான சேவை
பின்னர் இதிலிருந்து மீண்டு இறுதியில் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கதாநாயகனாக நடித்திருக்கும் சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. 

கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். தந்தையை தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வர வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் பணம் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்பு அபாரம். 
வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது். ஏர்போர்ஸ் ஆபிசராக இருக்கும் போது கம்பீரமாகவும், காதல் மனைவியுடன் இருக்கும் போது புத்துணர்ச்சியுடனும் நடித்திருக்கிறார். 

அபர்ணா பாலமுரளி, முதல் படம் என்றே தெரியாத அளவிற்கு அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாத்திரதம் அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். 
இறுதிச்சுற்று
சூர்யாவுக்கு போடும் கண்டிஷன், அவருடன் சண்டையிடும் காட்சி, நடனம், என ரசிக்க வைத்திருக்கிறார். தந்தையாக வரும் பூ ராமு கவனிக்க வைத்திருக்கிறார். தாயாக வரும் ஊர்வசி, சூர்யா ஊருக்கு வந்தவுடன் நடக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். 

மேலும் ஊர் மக்கள் உனக்கு துணையாக இருக்கிறார்கள் எப்படியாவது ஜெயித்து விடுடா மகனே என்று சொல்லும் போது கைத்தட்டல் பெறுகிறார். 

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய ‘சிம்பிள் ஃப்ளை’ நூலை அடிப்படையாகக் கொண்டும் ‘சூரரைப் போற்று’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. 
‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் படத்தை கொடுத்து இருக்கிறார். கதாப்பாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. 

அது போல் ”ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை”. ”நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ் என்ற வசனமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு. 
ஏர் டெக்கான் நிறுவனர்
கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் நிறைய ப்ளஸ் இருந்தாலும், ராணுவப் பயிற்சி மையத்தில் விமானத்தை அத்துமீறித் தரையிறக்க முடியுமா. 

குடியரசு தலைவரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியுமா.. என்ற கேள்விகள் எழுகிறது. ஜிவி பிரகாஷின் இசை மிகவும் அருமை. 
பாடல்கள் தனியாக இல்லாமல் கதையோடு பயணித்து இருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது.

மொத்தத்தில் இந்த படம் சூர்யாவை போற்றுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings