லவ் டார்ச்சர் செய்த கபிலனை காட்டுக்குள் தூக்கி சென்று வெட்டிய பெண் !

ரவுடி கபிலனுக்கு லாவண்யா என்றால் உயிர்.. அவர் பின்னாடியே சென்று லவ் டார்ச்சர் செய்துள்ளார்.. 
கபிலனை காட்டுக்குள் தூக்கி சென்று வெட்டிய பெண்

ஒரு கட்டத்தில் ரவுடி கபிலனை லாவண்யாவின் பெற்றோர் உட்பட 10 பேர் சேர்ந்து அடித்து கொன்று காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை தந்து வருகிறது.
பெரம்பலூர் துறைமங்கலம் கேகேநகரை சேர்ந்தவர் கபிலன்.. 27 வயதாகிறது.. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

நேற்றிரவு பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் விஏஓ அலுவலகம் அருகில் உள்ள காட்டு பகுதியில் கபிலன் விழுந்து கிடந்தார்.. 

உடம்பெல்லாம் ரத்தம்.. படுகாயங்களுடன் கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

ஆனாலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர்.

விசாரணை

தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. யார் கபிலனை அடித்து கொன்றது என தெரியவில்லை, 

அதற்கான காரணமும் உடனடியாக விளங்க வில்லை என்பதால் விசாரணையில் உடனடியாக தீவிரமானது.. 
அப்போது தான், அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுப்பிரமணியன், அவரது மனைவி தனலட்சுமி, மகன், மருமகன் உட்பட 10 பேர் சேர்ந்து கபிலனை கொன்றது தெரிய வந்தது.

பழிக்குபழி
பழிக்குபழி

இதையடுத்து 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியன், தனலட்சுமி, குணசேகரன், அரவிந்த் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். 

அப்போது தான் இது பழிக்குப் பழியாக நடத்தப்பட்ட கொலை என்ற தகவல் கிடைத்தது.. சுப்பிரமணியனும் கபிலனும் ஒரே பகுதி.. ஒரே ரியல் எஸ்டேட் தொழில்தான்.. 
சென்ட்ரிங் போடும் தொழிலும் செய்து வந்திருக்கிறார்கள். சுப்பிரமணிக்கு ரோகிணி, லாவண்யா, திவ்யா என்ற 3 மகள்களும், குணசேகரன் என்ற மகனும் உள்ளனர்.

ஒருதலை காதல்

தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. யார் கபிலனை அடித்து கொன்றது என தெரிய வில்லை, 

அதற்கான காரணமும் உடனடியாக விளங்கவில்லை என்பதால் விசாரணை உடனடியாக தீவிரமானது.. 

அப்போது தான், அதேபகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுப்பிரமணியன், அவரது மனைவி தனலட்சுமி, மகன், மருமகன் உட்பட 10 பேர் சேர்ந்து கபிலனை கொன்றது தெரிய வந்தது.

லவ் டார்ச்சர்

இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று எச்சரித்தனர்.. பெரம்பலூர் ஸ்டேஷனில் புகாரும் செய்தனர்.. இதன் பேரில் ஒருமுறை போலீசார் கபிலனை கைது செய்திருக்கிறார்கள். 
ஒருதலை காதல்

ஜெயிலுக்கு போய் வந்தும், கபிலனுக்கு லாவண்யாவை மறக்க முடியவில்லை.. திரும்ப திரும்ப தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி கொண்டே இருந்தார்.. 
நேற்று கூட லாவண்யா சென்று கொண்டிருந்த போது வழிமறித்து தகராறு செய்திருக்கிறார்.

காட்டில் கொலை

இதில்தான் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், அவரது மனைவி, உறவினர்கள் என எல்லாருமே சேர்ந்து கபிலனை வெறிதீர தாக்கி உள்ளனர்.. 

படுகாயமடைந்த அவரை தூக்கி கொண்டு போய் அந்த காட்டுப்பக்கம் வீசிவிட்டு போயுள்ளனர்.. இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.. 
ஒரு ரவுடிக்கு ஒரு தலைக்காதல் வந்ததும்.. அந்த லவ் டார்ச்சராலேயே உயிரிழந்த விவகாரமும் பெரம்பலூரை பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings