ஸ்டெர்லைட் வழக்கு - நேரில் ஆஜராக ரஜினிக்கு அழைப்பாணை !

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் திகதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 
ஸ்டெர்லைட் வழக்கு


இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆணையம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு திரும்பும் போது கருத்து தெரிவித்தது

தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பி யுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், நிருபர்களிடம் கூறும் போது:- 
”தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்” என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஏற்கனவே சீமான் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பி விசாரிக்கப்பட்ட நிலையில் ரஜினிக்கும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பப் பட்டுள்ளது.
Tags: