டிஎன்பிஎஸ்சி தேர்வு மோசடி குற்றவாளி கோர்ட்டில் சரண் !

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் தரகர் ஜெயக்குமார் போலீசில் பிடிபடாமல் தொடர்ந்து தலைமறை வாக இருந்தார். 


அவர் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் தமிழகத்தை விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்றே கருதப்பட்டது. 

இதைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களு க்கும் போலீசார் விரைந்தனர். அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.


இந்நிலையில், சென்னை சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் இன்று சரண் அடைந்தார். 
இதை யடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற் கான சட்ட நடைமுறை களை சிபிசிஐடி போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
Tags: