புதுச்சேரி முடங்கியது... பள்ளி, கல்லூரிகள் விடுமுறை !

விலைவாசி உயர்வு என பல்வேறு இடையூறுகள் வந்தாலும் குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப் படாமல் உள்ளது எனக் குற்றம் சாட்டி வந்த உழைப்பாளர்கள், 
புதுச்சேரி முடங்கியது


தொடர்ந்து 2வது ஆண்டாக ஜனவரி 8ஆம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டை முடங்கிப் போகச் செய்து விட்டனர்.

பாரத் பந்த் 2020இல் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் கூட்டமைப்பு பங்கேற் றுள்ளனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 21 ஆயிரம் வழங்க வழி செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும், 

ஒப்பந்ததாரர் தொழிலாளர் முறையைக் கைவிட வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், குடியுரிமை சட்டத் திருதத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன் வைத்தே இப்போது பாரத் பந்த் நடக்கிறது.

தமிழ்நாடு, கர்நாடகா விலிருந்து சபரிமலை தவிர, கேரளாவில் வேறு எந்த பகுதிகளு க்கும் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் கேரளாவில் வேலை பார்க்கும் தமிழ் நாட்டினர் கடும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர்.


புதுச்சேரி அரசு ஆதரவுடன் பந்த் நடைபெறுவ தால், இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கி யுள்ளது.

பேருந்துகள், ஆட்டோக்கள், கடைகள் என அனைத்து சேவைகளும் தடைப் பட்டுள்ளது. 

அரசுப் பள்ளி கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

பெரும் பாலான தனியார்ப் பள்ளி களுக்கும் விடுப்பு வழங்கப்பட்டு விட்டது.

புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. இந்த பந்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்றிருக் கின்றனர். 

இதனால் 6. 50 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடங்கி யுள்ளது. இன்று மாலை நேரத்தில் ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கணிக்கப் பட்டுள்ளது.
Tags: