முதியோர்களின் உடல் உறுதிக்கு உதவும் உடற்பயிற்சி !

0
60 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு பெரும்பாலும் முதலில் வரக்கூடிய பிரச்சனை Imbalance என்கிற நடையில் தடுமாற்றம். 
உடல் உறுதிக்கு உதவும் உடற்பயிற்சி


நடக்கும் போது நாம் தடுமாற்றம் இல்லாமல் நடக்க நம் சிறுமூளையின் செரிபெல்லம் தான் உதவுகிறது.

வயதாக ஆக சிறுமூளை பகுதி தளர்வடையும் போது தான் சிலர் மிகவும் மெதுவாக நடக்கிறார்கள். 

சிலரால் சரியாக நடக்க முடிவதில்லை. பெரும் பாலானவர்கள் தனித்து நடக்க முடியாமல், எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கிறார்கள். சி

இது தவிர வயதாகும்போது மூட்டுத் தேய்மானம், கணுக்கால் மூட்டு இறுகுதல், கண் பார்வை பாதிப்பு, குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு குறைதல், உடலில் ரத்த ஓட்டம் குறைதல் போன்ற பிரச்னைகளும் முதியவர்களுக்கு ஏற்படுகிறது.
மேற்கண்ட பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொண்டு தான் முதியவர் களுக்கான உடற்பயிற்சிகளை வரையறுக்க முடியும். உடல் தள்ளாடு வதைக் குறைக்க Balance training programme என்ற முறையில் பயிற்சிகள் இருக்கின்றன. 

இவற்றில் இரண்டு வகை உண்டு. நின்றுகொண்டே செய்யும் பயிற்சிகள், நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள்.

நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள். குதிகாலில் நிற்பது, முன்னங்கால் அல்லது விரல்களில் நிற்பது, முன்னங்காலை வைத்து 


அதன் பின்பகுதியைத் தொடுமாறு நேர்க்கோட்டில் மற்றொரு காலின் விரலை வைத்து நின்று கொள்ளுதல்,

நின்ற இடத்திலேயே காலை மாற்றி மாற்றி தூக்குதல், நின்ற இடத்திலேயே தன்னைத் தானே சுற்றிக் கொள்வது போன்ற பயிற்சிகள் இவற்றில் அடங்கும்.

நடந்து கொண்டே செய்யும் பயிற்சிகள் நேராக நடப்பது, பக்கவாட்டில் நடப்பது, பின்புறமாக நடப்பது ஒரு கோடு கிழித்து அதன் மேல் நடப்பது, நடந்து கொண்டே கழுத்தை மேலேயும் கீழேயும் அசைத்தல், 

கைகளை ஆட்டிக் கொண்டே நடப்பது, முன்னங்காலில் நடப்பது, குதிகாலில் நடப்பது போன்ற பயிற்சிகள் இந்த வகையில் அடங்கும்.

இந்த பயிற்சிகளை டிரெயினர் ஒருவரின் ஆலோசனையின்படி ஒருமுறை கற்றுக் கொண்டு விட்டு, பிறகு வீட்டிலேயே தொடர்ந்து செய்யலாம். 
சிறப்புப் பயிற்சிகள் தேவைப் பட்டால் அதற்குரிய இயன்முறை மருத்துவ மையங்களில் சென்று சில சிறப்பு சாதனங்கள் / உபகரணங் களின் உதவியுடன் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.

இவை தவிர உடலை உறுதியாக்கும் (Strengthening) பயிற்சிகளும் உள்ளன. 1 கிலோ அல்லது 500 கிராம் எடையுள்ள டம்புள்ஸ் எனும் எடைகளைப் பயன்படுத்தி இப்பயிற்சி களைச் செய்யலாம். 

மேலும், டெர்ராபேண்ட்/ எலாஸ்டிக் பேண்ட்களைப் பயன்படுத்தி தசை நார்களை வலுப்படுத்தும் பயிற்சி களையும் செய்யலாம்.


நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் பயிற்சிகள் உடலில் உள்ள எலும்புகளை உறுதிப் படுத்தும்

பயிற்சிகளும் தசைகளின் நெகிழ்த்துத் தன்மையை அதிகப் படுத்தும் பயிற்சிகளும் அவரவர் தேவைக்கேற்ப வழங்கப்படும். 

இவை போன்ற உடற்பயிற்சி களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் முதியோர்கள் உடலை உறுதியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

மேலும், நடக்க முடியாத முதியவர்கள், ரத்த ஓட்டம் குறைந்த முதியவர்கள், பிற காரணங்களுக் காக மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற்று முடிந்த பிறகு 
இயல்பு வாழ்க்கைக்கு மாறும் போது இது போன்ற உடற்பயிற்சிகள் மிகுந்த பலன் அளிக்கும். இவற்றை தினமும் காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் செய்வது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)