பாஸ்ட்டேக் பெற கால அவகாசம் ஜனவரி வரை நீட்டிப்பு !

0
சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்ட்டேக் எனும் மின்னணு அட்டை முறை அமல் படுத்தப்பட உள்ளது.
பாஸ்ட்டேக் பெற கால அவகாசம்


இதன்படி வாகன உரிமையா ளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகளிலும் பாஸ்ட்டேக் முறை அமல் படுத்தப்பட உள்ளது.

டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த பாஸ்ட்டேக் முறை கட்டாயம் அமல்படுத்தப் படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே 15 நாள்கள் அவகாசம் நீடிக்கப் பட்டது.

இந்நிலையில், பாஸ்ட்டேக் மின்னணு அட்டை பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம், அதாவது ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings