நடுரோட்டில் போலீஸ் ஏட்டை தாக்கிய வாலிபர்கள் - போலீசார் அதிர்ச்சி !

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் போலீஸ் சரக பகுதியில் வெளிச்சந்தை யில் மதுபாட்டில் விற்பனை செய்யப் படுவதாக போலீஸ் அதிகாரிகளு க்கு தகவல் கிடைத்தது.
நடுரோட்டில் போலீஸ் ஏட்டை தாக்கிய வாலிபர்கள்


இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் ஏட்டு செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் 

நேற்று திருவோணத்தை அடுத்துள்ள புதுவிடுதி ஆற்றுபாலம் அருகே பட்டுக்கோட்டை -செங்கிப்பட்டி பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு குடிபோதையில் இருந்த 2 வாலிபர் களுக்கும், போலீஸ் ஏட்டு செந்தில் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வாலிபர்களும், போலீஸ் ஏட்டும் நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் செந்தில் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தை சாலையில் சென்றவர்கள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பட்டப்பகலில் பிரதான சாலையில் போலீஸ் ஏட்டை வாலிபர்கள் சரமாரியமாக தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் இந்த சம்பவம் வாட்ஸ்- அப் மற்றும் இணைய தளத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி யடைந்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings