போட்டியின் இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை !





போட்டியின் இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
மிசோரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் இடையே கைக்குழந்தை க்கு பால் கொடுத்த கைப் பந்து வீராங்கனை யின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை


பலரும் அந்தப் பெண்ணை பாராட்டி வருகின்றனர். மிசோரம் மாநிலம் துய்கும் மாவட்டத்தைச் சேர்ந்த கைப்பந்து வீராங்கனை லால் வென்ட்லுவாங்கி. 

அவர், மிசோரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தொடக்க விழாவில் கைப்பந்து போட்டியில் லுவாங்கி கலந்து கொண்டார். 

அவருடன் ஏழு மாதக் குழந்தையையும் எடுத்துச் சென்றிருந்தார். போட்டி இடைவேளை யின் லுவாங்கி அவரது ஏழு மாதக் குழந்தைக்கு பால் கொடுத்தார்.

அந்தப் போட்டோ இணையத்தில் வைரலானது. மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ரோய்டி, அந்தப் புகைப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, லுவாங்கிக்கு பாரட்டு தெரிவித்திருந்தார். 

மேலும், அந்தப் பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவித்தார். அந்தப் போட்டியில் லுவாங்கி பங்கேற்ற அணி வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)