டெல்லி மலைப்பகுதியில் நில நடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு !

0
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் இன்று மாலை மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சில இடங்களில் மிதமான நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது. 
டெல்லி மலைப்பகுதியில் நில நடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு


பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் மட்டுமல்லாது சண்டிகர், மதுரா ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

டெல்லி என்சிஆர், ஹிந்துகுஷ் பகுதியில் மட்டும் நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.8 ஆக இருந்ததாகக் கூறப்படு கிறது.

நில அதிர்வு குறித்த செய்தியால் வட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் ‘அலர்ட் மெசேஞ்கள்’ பரவி வருகின்றன.

வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. நொய்டா, காஜியாபாத், க்ரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவாகி யுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதிகளில் 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே, டெல்லியில் உணரப் பட்டுள்ளதாக புவியியல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)