குடியாத்தம் சிறுமியை சீரழித்தவனை குமுறி எடுத்த பொதுமக்கள் !

0
இதோ இப்படி குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடக்கிறாரே.. இவர் தான் 11 வயது பெண்ணை வயக்காட்டில் வைத்து பாலியல் தொல்லை தந்தவர்.. மக்கள் குமுறி எடுத்து விடவும், ஆஸ்பத்திரி யில் இந்த கோலத்தில் கிடக்கிறார்.
 சிறுமியை சீரழித்தவனை குமுறி எடுத்த மக்கள்


குடியாத்தத்தை அடுத்துள்ள மேல்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.. 11 வயதாகிறது.

குடியாத்தத்தை அடுத்த குளிதிகை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 30 வயதாகும் இந்த இளைஞர் நேற்று மதியம் 3.30 மணிக்கு இந்த பெண்ணின் ஸ்கூலுக்கு போயுள்ளார்.

நேராக ஹெச்.எம்-மிடமே சென்று விட்டார் வினோத்.. தன்னை சிறுமியின் உறவினர் என்று அறிமுகப் படுத்தி கொண்டார். "இவளோட அப்பாவுக்கு திடீர்ன்னு அடிபட்டுடுச்சு.. 

உடனே கூட்டிட்டு வர சொன்னார்" என்று சொல்லவும், ஹெச்.எம் அதை நம்பி பதறி போய், சிறுமியை அந்த இளைஞருடன் அனுப்பி வைத்தார்.

பிறகு பைக்கில் சிறுமியை அழைத்து செல்லப் பட்டதும், சிறுமியின் தந்தைக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்க ஹெச்.எம். போன் செய்தார். போனை சிறுமியின் தந்தைதான் எடுத்தார்.. 


"அடிபட்டதா சொன்னாங்களே.. எப்படி இருக்கு"? என்று கேட்கவும், "எனக்கு ஒன்னு மில்லையே, நான் நல்லா தான் இருக்கேன்" என்றார் அவர்.

அப்போதுதான் மாணவியை கடத்திய விஷயம் தெரியவந்தது.. உடனடியாக சிறுமியை ஊர்மக்கள், மாணவர்கள் தேட ஆரம்பித்தனர்.

அந்த சமயம், கிராமத்தில் இருந்த ஒரு ஓடை பகுதியில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது.. 

சிறுமியை இந்த பகுதிக்கு அழைத்து வந்து.. மிரட்டி பலாத்காரம் செய்யும் வன்முறையில் ஈடுபட்டு கொண்டிருந்தார் வினோத். இதை கண்டு கிராம மக்கள் கொதித்துபோய், வினோத்தை நைய புடைத்து விட்டனர். 

உடம்பெல்லாம் காய மடையவும், குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டுள்ளார். வினோத் மீது குடியாத்தம் மகளிர் போலீசிலும் புகார் செய்யப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings