நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம் - போலீசார் தகவல்!

0
நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார்' என குஜராத் போலீசார் தெரிவித் துள்ளனர்.
நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தா வின் 'யோகினி சர்வயக்ஞ பீடம்' செயல்பட்டு வந்தது. 

இந்த பீடத்தை நித்யானந்தா வின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப் படுவதாக புகார் வந்தது. 

இதை யடுத்து போலீசார் சோதனை நடத்தி நான்கு குழந்தை களை மீட்டனர். 

இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் ஆமதாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி. அசரி கூறியதாவது: கர்நாடகாவில் நித்யானந்தா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப் பட்டது. 

இதை யடுத்து அவர் வெளிநாடுக்கு தப்பியோடி விட்டார். தேவைப் பட்டால் அவரை வெளிநாட்டில லிருந்து வரவழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுப்போம். 

இந்தியாவுக்கு அவரே திரும்பி வந்தால் நிச்சயம் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings