மாணவிகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய டியூசன் ஆசிரியை !

0
டியூஷன் படிக்க வந்த மாணவிகளை மிரட்டி அவர்களை ஆபாசமாக படம் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சென்னையைச் சேர்ந்த 28 வயதாகும் டியூஷன் ஆசிரியை 
பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய டியூசன் ஆசிரியை


மற்றும் அவரது அண்டை வீட்டு ஆண் நண்பர் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளி யிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபர் இந்தக் காணொளி களை வைத்து மிரட்டி மாணவி களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி யுள்ளார்.

அதற்கு அந்த ஆசிரியை உதவி யுள்ளார் என்று அந்த செய்தியில் கூறப்பட் டுள்ளது.

இதை வெளியில் சொன்னால் அந்தக் காணொளிகள் இணையத்தில் பகிரப்படும் என்று அந்த மாணவிகள் மிரட்டப் பட்டுள்ளனர்.

வேறு பல மாணவிகளும் இவ்வாறு மிரட்டி படம் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக் கின்றனர் என்றும் அவர்களில் 14 வயதாகும் ஒரு மாணவி மட்டுமே புகார் கொடுக்க முன் வந்ததாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இருவர் மீதும் குழந்தை களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings