திருவேற்காட்டில் தனியார் தங்கும் விடுதி அறையில் நடந்த விபரீதம்.. புதிய போதை !

0
சென்னை அடுத்த திருவேற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி யிருந்த போதை கும்பல், கஞ்சா, சாராயம் மற்றும் மெத்தனால் ஆகிய வற்றை கலந்து 
தங்கும் விடுதி அறையில் நடந்த விபரீதம்


புதிய போதை பொருளை தயாரிக்கும் போது தீப்பிடித்ததால் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

புதிய போதையை அடைய முயற்சித்து இந்த கும்பல் செய்த விபரீத சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் ஓயோ என்ற பெயரில் ஆன்லைனில் பதிவு செய்து தங்கும் விடுதி இயங்கி வருகிறது. 

சாதாரணமாக வாடகைக்கு கிடைக்கும் அறை போன்று இல்லாமல் சமையல் செய்ய அடுப்பு, மளிகைப் பொருட்கள் என கிட்டத்தட்ட சிறிய அளவிலான வீடு போன்றே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 7ஆம் தேதி பெருங்குடியைச் சேர்ந்த “ரேஸ் ராஜா”, அவரது நண்பர்களான ராஜேஷ், ஞானவேல்ராஜா, விக்னேஷ், முகமது ரசாக் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.


அன்று மாலை ரேஸ் ராஜாவையும் விக்னேஷையும் தவிர்த்து மற்ற 3 பேர் மது வாங்க வெளியே சென்றுள்ளனர். 

அறையில் இருந்த ரேஸ் ராஜா கஞ்சா, சாராயம் மற்றும் மெத்தனால் ஆகிய வற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் இட்டு, அங்கிருந்த மின்சார அடுப்பில் வைத்துள்ளார்.

அந்தக் கலவை கொதி நிலையை அடைந்தபோது, அறை முழுவதும் ஒரு எரிவாயு சூழ்ந்துள்ளது. 

அப்போது ஏற்கனவே மது போதையில் இருந்த ரேஸ் ராஜா, சிகரெட் பிடிப்பதற்காக லைட்டரை பற்ற வைத்ததாகவும் அறையில் சட்டென தீப்பற்றிய தாகவும் கூறப்படுகிறது.


இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிய அலறிக்கொண்டு வெளியே ஓடி வந்த இருவரில் விக்னேஷ் லேசான காயங்களுடன் தப்பிவிட,

பலத்த காயமடைந்த ரேஸ் ராஜாவை மீட்டு விடுதி ஊழியர்கள் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். 

பின்னர் மேல் சிகிச்சைக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார். முன்னதாக அறையில் சூழ்ந்திருந்த தீ அணைக்கப்பட்டு போலீசாரு க்குத் தகவல் கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த போதை கும்பலின் பின்னணி குறித்தும் ஓயோ நிறுவனத்தின் மற்ற விடுதிகளில் இது போன்ற செயல்கள் நடைபெறுகிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)