பற்றி எறிந்த கொட்டகை கருகிய 32 கால்நடைகள்... ஊர்மக்கள் வேதனை !

0
கடலூர் மாவட்டம் அருகே ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 32 கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆழி கிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சி என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகை யில் 30 ஆடுகள் 2 பசுங்கன்று குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். 

நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் உள்ளே இருந்த கால்நடைகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதை யடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த விருதாச்சலம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். 

கால்நடைகள் கருகிய நிலையில் சடலமாக இருந்ததை கண்ட கொளஞ்சியும் அவரது மனைவியும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 
இது குறித்து வழக்கு பதிவு செய்த கருவேப்பிலங் குறிச்சி காவல் துறையினர் மாட்டு கொட்டகை க்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings