கேஸ் அடுப்பை சரி செய்த போது சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி !

0
குண்டூரில் கேஸ் அடுப்பை சரி செய்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் இரு பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந் துள்ளனர். 
கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி



ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள என்.டி.ஆர். நகர் காலனியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் புதிய சிலிண்டர் ஒன்றை வாங்கி வந்துள்ளார். இதனை கேஸ் அடுப்பில் பொருத்த அவர் முயற்சி செய்துள்ளார். 

ஆனால், அது முடியாத பட்சத்தில் பக்கத்து வீட்டு பெண்மணியான திய்வாவையும் உதவிக்கு அழைத்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கேஸ் அடுப்பை சரி செய்து கொண்டு இருந்த போது, எதிர் பாராத விதமாக சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. 
இதில் ஆதி லட்சுமியின் வீட்டு கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஆதிலட்சுமி மற்றும் திவ்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த நிலையில் வீட்டில் இருந்த மற்ற 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை யடுத்து, அவர்கள் சிகிச்சைக் காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 



ஆனால், நாகார்ஜுன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அது மட்டுமல்லாது, மேலும் ஒருவரின் நிலை கவலைக் கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப் படுகிறது. 
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குண்டு வெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, 

அது தவறான சிலிண்டரா அல்லது தளர்வான இணைப்பு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து அறிய முயற்சி செய்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings