குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன் !

0
குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன்... அமெரிக்காவில் தனது குடும்பத் தினர் 5 பேரையும் 14 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்



அலபாமா மாகாணத்தில் குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கி யால் சுட்டு விட்டு போலீசை அழைத்து தானே குற்றத்தையும் ஒப்புக் கொண்டுள்ளான் அந்த சிறுவன். 
எல்க்மொண்டில் என்ற இடத்தில் உள்ள வீட்டில் சிறுவன் துப்பாக்கி யால் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

போலீசை தொலைபேசி மூலம் சிறுவன் தொடர்பு கொண்டு வீட்டில் தனது குடும்பத்தினர் 5 பேரையும் சுட்டு விட்டேன் என்று கூறியதாக அலபாமா அரசு டுவிட்டரில் தெரிவித் துள்ளது.

மேலும் குடும்பத்தினரை சுட்டுவிட்டு கைத்துப்பாக்கியை சிறுவன் அருகில் தூக்கி எறிந்ததா கவும் அதை தேடும் பணியில் சிறுவன் தற்போது உதவி வருவதாகவும் கூறப் பட்டுள்ளது. சிறுவன் எதற்காக கொலை செய்தான் என்ற தகவல் தெரிய வில்லை.
வக்கீல் குழுவான கிஃபோர்ட்ஸ் சட்ட மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி அமெரிக்கா வில் துப்பாக்கி வன்முறையால் ஒரு ஆண்டுக்கு 36 ஆயிரம் பேர் உயிரிழப்ப தாகவும் அதில் மூன்றில் ஒரு பங்கு படுகொலைகள் என்றும் கூறப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings