சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல் Sep.1 வெளியாகிறது !

0
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை நாளை முதல், இந்திய அதிகாரிகள் பெற முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. 
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல்



அதில் கூறியுள்ள தாவது: 

கருப்பு பணம் மீட்பு நடவடிக்கைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 

2018 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த யார் யாரெல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருந்தார்களோ அவர்களுடைய அனைத்து தகவல் களையும் அந்த வங்கி இந்திய அதிகாரிகளுக்கு வழங்க உள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த தகவல்களை ஸ்விஸ் வங்கி வழங்க உள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுவரை சுவிஸ் வங்கியில் யார் யார் கணக்கு வைத்து உள்ளார்கள் என்ற விபரம் மர்மமாக இருந்த நிலையில், பல்வேறு வதந்திகள் சமூக வலைத் தளங்களில் பரவி வந்தன.

இவை அனைத்தும் நாளை முதல் விடை கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings