பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப் !





பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தாக அமெரிக்கா அறிவித்தது. 
பின்லேடனின் மகன்




இதை யடுத்து தனது தந்தையை கொன்றதற் காக அமெரிக்காவை யும், அமெரிக்கர் களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக வும், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடி இளவரசரா கவும் பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.

அதுமுதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாக வும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

இதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர் களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.




இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப் பட்டார் என்பதை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உறுதிப் படுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் பதுங்கி யிருந்த ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் அமெரிக்க பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப் படையினரால் கொல்லப் பட்டான் என தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)