வானத்தில் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம்... அபூர்வ நிகழ்வு !

0
ஈரோடு பகுதியில் சூரியனைச் சுற்றி ஏற்பட்ட ஒளி வட்டத்தை பொது மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. 
வானத்தில் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம்... அபூர்வ நிகழ்வு !
கோடை காலத்தைப்போல வெயில் வாட்டியது. இந்த நிலையில் காலை 11 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றிலும் ஒளி வட்டம் தோன்றியது. இதனால் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது.

வட்டத்தின் விளிம்பில், வானவில் தோன்றும் போது ஏற்படும் நிறங்கள் சூழ்ந்திருந்தன. 

திடீரென வானில் இந்த மாற்றத்தைக் கண்ட ஈரோடு, கிருஷ்ணம் பாளையம் பகுதியில் உள்ள பொது மக்கள் பலர் தெருக்களில் திரண்டு இந்த அதிசய நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.
ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடிக்கு சென்று வானில் தோன்றிய இந்த ஆபூர்வ நிகழ்வை கண்டு ரசித்ததோடு தங்கள் செல்லிடப் பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். 

அதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வேகமாக பரவியது. இதனால் ஈரோடு, பெருந்துறை, மொடக் குறிச்சி, சித்தோடு, பவானி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 

பொது மக்களும் சூரியனைச் சுற்றி ஏற்பட்டுள்ள ஒளி வட்டத்தை நேரில் பார்த்தனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஒளிவட்டம் நீடித்தது.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.மணி கூறியதாவது:

வானில் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கும் போது, சூரிய ஒளி 22 டிகிரியில் விழுந்தால் ஒளிச்சிதறல் ஏற்படும். 
அப்போது சூரியனைச் சுற்றிலும் இதுபோன்ற வளையம் ஏற்படும். இதே போல நிலவிலும் வளையம் தோன்றும். இது ஒளிச்சிதறலின் பரிணாமம் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings