ஆம்புலன்ஸ் தராத அரசு மருத்துவமனை - மாணவி உயிரிழந்த சோகம் !

0
காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்கு சென்னை செல்வதற்காக ஆம்புலன்ஸ் வழங்க தாமதமான தால், 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆம்புலன்ஸ் தராத அரசு மருத்துவமனை
காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி சரிகா என்பவர், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் கடந்த ஓராண்டாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், உடல் நிலை மோசமாகவே கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவியின் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாகவே, மருத்துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு பரிந்துரைத் துள்ளனர். 

ஆனால், சென்னைக்கு மாணவியை அழைத்து செல்ல, மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க வில்லை என மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
சுமார் 7 மணிநேரமாக ஆம்புலன்ஸ் வழங்கப்பட வில்லை எனவும், அதுவரை மாணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்க வில்லை எனவும், ஆக்ஸிஜன் மட்டுமே வழங்கப் பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மாணவி சரிகா உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்கப் படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் மருத்துவ மனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)