நோய் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட டிரைவர் !

0
பாகூர் ஜெயராமன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 56). டிரைவர். இவருக்கு சக்திகலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
நோய் கொடுமையால் டிரைவர் தற்கொலை




இந்த நிலையில் வெங்கடேசனு க்கு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டு இருந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நோய் கொடுமையால் அவதி அடைந்து வந்தார்.

இதனால் கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனே அவரை குடும்பத்தினர் காப்பாற்றினர்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று காலை மின் விசிறியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து பாகூர் சப்- இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings