குடியிருப்பு பகுதிக்குள் நாயைத் தாக்கிய முதலை !

0
பலத்த மழையின் காரணமாகக் குஜராத் பகுதியில் பல இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. தண்ணீர் புகுந்த குடியிருப்பு பகுதிகளில் முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளது. 
குடியிருப்பு பகுதிக்குள் நாயைத் தாக்கிய முதலை



அப்படி ஒரு குடியிருப்பு பகுதியில் ஒரு நாயைத் முதலை தாக்கிய பயங்கரமான வீடியோ தற்பொழுது வைரலாகி யுள்ளது.

வேகமாகப் பகிரப்பட்டு வரும் வீடியோ

நேற்று முதல் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு தெருவில் நாய் ஒன்று தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்கிறது. 
திடீரென ஒரு முதலை நீருக்குள்ளிருந்து தலையை நீட்டி நாயை நோட்ட மிடுவது பதிவாகி யுள்ளது.

நாயைப் பாய்ந்து தாக்கிய முதலை
நீரிலிருந்து வெளியே வந்த முதலை நடந்து சென்ற நாயின் பின்னால் பதுங்கி அதைத் தாக்க முயல்கிறது. நாய் அருகில் முதலை வருவது அறியாமல் நின்று கொண்டிருக்கிறது. நீரிலிருந்த முதலை நாயைப் பாய்ந்து தாக்குகிறது.




மொபைலில் வீடியோ

அதிர்ஷ்ட வசமாக நாய் அங்கிருந்து தப்பித்துச் சென்று விடுகிறது. இந்த காட்சியை குடியிருப்பில் உள்ள ஒரு நபர் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ வலைத் தளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

அதிகரிக்கும் முதலை நடமாட்டம்
இதேபோல் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் முதலைகளின் நடமாட்டத்தைப் பலரும் வீடியோ பதிவு செய்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 
இரவு நேரங்களில் சாலைகளில் முதலைகள் நடந்து செல்லவது போன்ற வீடியோக்களும் வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.



குடியிருப்பிள் நுழைந்த முதலை...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings