68 வயதுக்காரருக்கு வாழ்நாள் சிறை - அரசு ரூ.7 லட்சம் கொடுக்கணும் !

0
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர் அசரப் அலி (68). இவர் கடந்த 03.09.2018-ல் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
அரசு ரூ.7 லட்சம் கொடுக்கணும்
இது பற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் அசரப் அலியை கைது செய்தனர். இந்த வழக்கானது, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் தான் தற்போது நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கி யுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி, '7 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். 
அபராதம் கட்டத் தவறினால், மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடாக அரசு கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.
`சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

மேலும், இது போன்ற குற்றங்களு க்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings