கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக் - சிசிடிவி காட்சி !

0
சென்னை ராயப் பேட்டையில் அதிவேகமாக ஓடிய கார் ஒன்று ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இது குறித்த சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக்




சென்னை ராயப் பேட்டையில் உள்ள மணிக்கூண்டு அருகே ஒரு கார் ஒன்று படுவேகமாக சென்றது. அப்போது எதிரே வந்த ஒரு பெண்கள் மீது மோத முயன்றது. ஆனால் அவர்கள் சுதாரித்து விலகிச் சென்றனர். 

இதை யடுத்து அந்த கார் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பின்னர் இது குறித்து அண்ணா சதுக்கம் போக்கு வரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் காரை வேகத்தில் ஓட்டி வந்த இளைஞர் போதையில் இருந்து தெரிய வந்தது. 

இந்த விபத்தின் போது அப்பகுதியில் இருந்த சிசிடிசி கேமராவில் பதிவாகி யிருந்த காட்சிகள் தற்போது வெளியாகி யுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings