மூளையில் ரத்த கசிவால் உயிரிழந்த டிக் டாக் பிரபலம் !

0
மூளையில் ரத்தக்கசிவு காரணமாக டிக் டாக் பிரபலமான ஆருணி உயிரிழந்தார். சமூக வலை தளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள டிக் டாக் உலகில் மிகவும் பிரபலமானவர் 9 வயதான ஆருணி கரூப். 
மூளையில் ரத்தக்கசிவால் உயிரிழந்த டிக் டாக் பிரபலம்



தன்னுடைய நடிப்புத்திறன் மூலம் டிக் டாக்கில் தனக்கென பெரிய ரசிகர்கள் வட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆருணி கடுமையான தலைவலியால் அவதிப்பட்ட தாக கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட ஆருணிக்கு மூளையில் ரத்தக்கசிவு போன்ற நோய் இருப்பதாக தெரிய வந்துள்ளது. உடனே அவர் திருவனந்த புரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். 
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி ஆருணி உயிரிழந்தார். சவுதி அரேபியாவில் பணியில் இருந்த போது ஆருணியின் தந்தை கடந்த வருடம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

ஆருணியின் இறப்பு மலையாள டிக் டாக் வாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அவருடைய டிக் டாக் வீடியோவை பலரிம் பகிர்ந்து ஆருணிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings