தெலங்கானாவில் குடியிருப்பில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி !

0
குடியிருப்பு பகுதிக்குள் குட்டி கரடியுடன் புகுந்த தாய்க்கரடி 5 பேரை தாக்கியதால் மக்கள் அச்சமடைந்த சம்பவம் தெலங்கானா வில் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானாவில் குடியிருப்பில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி




தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள தர்மாரம் கிராமத்தில் தாய் கரடி மற்றும் குட்டிக் கரடி திடீரென குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. 

இரண்டு கரடிகளும் அப்பகுதியில் வசிக்கும் ராஜி, நரசிம்மா, பெத்தப்பா உள்ளிட்ட 5 பேரை தாக்கின. பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கரடியைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர். 
ஆனால், கரடி அங்கிருந்த முட்புதருக்குள் சென்று‌ விட்டது. இது குறித்து வனத்துறை யினருக்கும், காவல் துறையினரு க்கும் தகவல் தெரிவிக்கப் பட்டதை அடுத்து கரடிகளைப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

காயமடைந் தவர்கள் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக் காக சேர்க்கப் பட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings